
சைவ சமயத்தின் பொக்கிஷமான திருமந்திரம், திருமூலர் அருளிய பத்தாவது திருமுறையாகும். இந்நூல் பாயிரம் மற்றும் முதல் தந்திரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது, விளக்கவுரையுடன் 336 பாடல்களைக் கொண்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் தொடங்கி, உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் உட்பட பல்வேறு ஆன்மீக விஷயங்களை இந்நூல் ஆழமாக விவரிக்கிறது.
வேதம் கடவுள் துதிகளை மட்டும் கொண்டிருக்காமல், உண்மையான ஞானத்தை அடைவதற்கான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை திருமந்திரம் வலியுறுத்துகிறது. உணர்வுகளைத் தூண்டுவதை விட அறிவைத் தூண்டிவிடும் திருமந்திரம், பண்டைய ஞானம் நவீன விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவதையும் சுட்டிக்காட்டுகிறது.
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, அன்புடைமை, கல்வி, மது விலக்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் உள்ள பாடல்கள், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து அறம், அன்பு, ஞானம் ஆகியவற்றின் பாதையில் செல்ல நம்மை ஊக்குவிக்கின்றன.
இந்நூலில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சிறிய வழிகாட்டி மட்டுமே. பாடல்களைப் படித்து, உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப அதன் ஆழமான பொருளை உணர்ந்து பயன் பெறுங்கள். திருமந்திரத்தின் உயர்ந்த தத்துவங்களை அனுபவியுங்கள்!
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
செல்பேசிகளில் படிக்க
திருமந்திரம் – விளக்க உரையுடன்
பாயிரமும் முதல் தந்திரமும்
336 பாடல்கள்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு – Freetamilebooks.com
அட்டைப்பட வடிவமைப்பு, விளக்கவுரை – ரய்
மின்னூல் ஆக்கம் – நரேன்
உரிமை – திருமந்திரம் பாடல்கள் பாயிரமும் முதல் தந்திரமும் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 266
செப்டம்பர் 6 2016





Leave a Reply