ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
சென்னை
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
மின்னஞ்சல்: yercaudelango@gmail.com
மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த்
மின்னஞ்சல்: vasanth1717@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அடிப்படைத் தேவைக்காக போராடக்கூடிய மக்களைப் பார்த்து இவர்களுக்கு வேறு வேலைகள் கிடையாது என கிண்டலடிப்பவர்களும், கேளிக்கை செய்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு நாம் அனுபவித்து வரும் உரிமைகள் அனைத்தும் போராடி பெற்றவைகள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யாராவது போராடி, தியாகம் செய்து சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தால் சுகமாக வாழத்தயாராக இருப்பார். ஆனால் அவர் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளமாட்டார். நமக்கு போராட்டமெல்லாம் எதற்கு என்பார்.
மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடுக்க உடை, வாழ இருப்பிடம் போன்றவைதான். இவைகள் மனித சமூகத்திற்கு கிடைக்கும் வரை போராட்டம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றுவரும் மக்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒரு இருப்பிடம் தேவை என்பதற்காக புறம்போக்கு நிலத்தில் குடிசை போடுகிறார்கள். அவர்களுக்கு மாடி வீடு தேவையில்லை. குடிசையே போதும் என்கின்றனர். போட்ட குடிசைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். இதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
போராடக்கூடிய மக்களிடையே இருக்கும் ஒற்றுமை, கூட்டம் கூடி விவாதித்து முடிவெடுப்பது, நல்லது கெட்டது பற்றி பேசுவது, தனக்குள்ள உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுதல் போன்றவற்றை அவர்களிடம் காணமுடிந்தது. வாய்பேச முடியாத ஊமைகளாக இருந்த மக்களை வாய்பேசுபவர்களாக மாற்றுவது போராட்டம்தான் என்பதைக் காணமுடிந்தது. போராட்டம்தான் ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது என்பதையும் தெரிந்த கொள்ளமுடிந்தது. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “குடிசை” என்கிற குறுநாவலை எழுதியுள்ளேன்.
இந்த குறுநாவலை செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ளு. நவசிவாயம் அவர்களுக்கும் தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுலீதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. சமூகத்தில் நிலவும் ஒரு அடிப்படைப் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள “குடிசை” என்கிற குறுநாவலை மின்னூலாக வெளியிடும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-ஏற்காடு இளங்கோ
பதிவிறக்க*
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “குடிசை - குறுநாவல் epub” kudisai.epub – Downloaded 7038 times – 447 KB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “குடிசை - குறுநாவல் mobi” kudisai.mobi – Downloaded 1349 times – 1 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “குடிசை - குறுநாவல் A4 PDF” kudisai-A4.pdf – Downloaded 5375 times – 1 MB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “குடிசை - குறுநாவல் 6 Inch PDF” kudisai-6-inch.pdf – Downloaded 1705 times – 1 MB
புத்தக எண் – 87
ஜூன் 27 2014
[…] http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/ […]
தாங்களின் குடிசை நாவல் படித்தேன். கதை பாதியிலே நிக்கிற மாதிரி உணர்கிறேன்.