சு.கோதண்டராமன்
வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
உருவாக்கம்: சு.கோதண்டராமன்
மின்னஞ்சல்:kothandaramans@yahoo.co.in
மேலட்டை உருவாக்கம்: Lenin Gurusamy
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
பாரதி என்றாலே முண்டாசும் கொடுவாள் மீசையும் கறுப்புக் கோட்டும் கொண்ட உருவம் தான் நினைவுக்கு வருகிறது. அது போல அவரது கவிதைகளைப் பற்றி நினைக்கும்போது அவரது தெய்வபக்தி, தேசபக்தி, சமுதாய மறுமலர்ச்சி நாட்டம், பெண் விடுதலையில் ஆர்வம் ஆகியவை தான் முதலில் புலப்படுகின்றன. கறுப்புக் கோட்டின் பின்புலமாக ஒரு வெள்ளைச் சட்டை இருந்தது போல, இத்தனை பண்புகளுக்கும் பின்புலமாக அமைந்திருந்தது வேதங்களில் அவர் கொண்டிருந்த பற்று.
தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.
தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.
வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் பக்கங்களில் காண்போம்.
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
செல்பேசிகளில் படிக்க
புத்தக எண் – 115
நவம்பர் 6 2014






Leave a Reply