fbpx

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

bayam-cover

ஜோதிஜி திருப்பூர்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

உருவாக்கம்: ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – [email protected]

 

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: [email protected]

 

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : [email protected]

மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்

மின்னஞ்சல் : [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/என்ற பெயரில் வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன . கடந்த நான்கு ஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/ என்ற பெயரில் எழுதி வருகின்றேன் .

அனுபவம் , செய்திகள் , கட்டுரை , சமூகம் , பயணக்கட்டுரை , ஆன்மீகம் , நெடுங்கதை , தமிழ்நாட்டு அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் , ஈழம் சார ்ந்த வரலாறு , தமிழர் வரலாறு , குழந்தைகள் குறித்த தொடர் நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி வந்துள்ளேன் .

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது . 4 தமிழ் மீடியா வெளியிட்டார்கள் . அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நக ரம் . திருப்பூர் வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு . இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன் வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள் . அடுத்து கல்வி குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வர காத்துக் கொண்டிருக்கின்றது .

அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடர் வாரந்தோறும் (2014) வெள ்ளிக்கிழமை அன்று திருப்பூர் தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது . இதுவும் புத்தமாக மாற வாய்ப்புண்டு .

கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை 682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம் வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின் எண்ணிக்கை 10 லட்சம் .

கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறை யில் பணியாற்றிவருகின்றேன் .

மனைவி பெயர் மாதவி . இளங்கலை வணிகவியல் பட்டதாரி . எனக்கு தோழியாக , என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாக இருக்கின்றார் . எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி , துர்க்கா தேவி , கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி . முறைய ஆறாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள் . குழந்தைகள் மூவருக்கும் என் எழுத்து , இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது , நான் எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிக நன்றாகவே தெரியும் .

மூவரும் என்னை எழுத்தாளன் என்று என ்னை ஒப்புக்கொள்ளவில்லை . காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதே அவர்களுக்குண்டான பிரச்சனை . மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றி இங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுது போக்குகளில் ஒன்று . அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்க ளாக மாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன் . எப்போது போல என் மனைவி அவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக் கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதே எங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது .

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை , இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் .

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும் . சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும் .

நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம் . எத்தனை சமூகம சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம் . இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம் .

உணர்ந்து படியுங்கள் . உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை மறக்காமல் எனக்குத் தெரியப்ப டுத்துங்கள் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர் .

09.12.2014

JOTHI GANESAN

E Mail – [email protected]

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் epub”

live-with-fear.epub – Downloaded 14693 times – 6.41 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் mobi”

live-with-fear.mobi – Downloaded 7857 times – 14.37 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் A4 PDF”

live-with-fear-A4.pdf – Downloaded 13173 times – 4.70 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் 6 inch PDF”

live-with-fear-6-inch.pdf – Downloaded 4029 times – 28.84 MB

 

இணையத்தில் படிக்க – http://livelifewithfearness.pressbooks.com

 

புத்தக எண் – 120

டிசம்பர்  9 2014

2 Comments

  1. […] பயத்தோடு வாழப் பழகிக் கொள் […]

  2. Live With Fear – Tamil Tee
    Live With Fear – Tamil Tee February 20, 2016 at 12:47 pm .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/live-with-fear/ […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.