
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற சேர மன்னனின் ஆட்சிக் காலத்தில், மேற்குக் கடற்கரை நகரங்களை அச்சுறுத்திய கடம்பர் படையெடுப்பை மையமாகக் கொண்டதுதான் “வஞ்சி மாநகரம்” என்ற இந்த வரலாற்று நாவல்.
கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் குமரன் நம்பி, அமைச்சர் அழும்பில்வேள், கடற்கொள்ளையர் தலைவன் ஆந்தைக் கண்ணன், அழகிய அமுதவல்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்.
கடம்பர்களின் முற்றுகையை முறியடிக்கக் குமரன் நம்பி வகுக்கும் திட்டங்களும், காதலி அமுதவல்லியை மீட்க மேற்கொள்ளும் முயற்சிகளும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் அழும்பில்வேளின் சாணக்கியத்தனமும், குமரன் நம்பியின் வீரமும் வாசகர்களைக் கட்டிப்போடும். காதல், வீரம், அரசியல் சூழ்ச்சியென அனைத்தும் கலந்த இந்த நாவல், சேர நாட்டின் வரலாற்றைச் சுவைபடக் கூறுகிறது.
எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் எழுத்து நடை, வஞ்சிமாநகரத்தின் அழகையும், அக்கால மக்களின் வாழ்க்கையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. சரித்திரக் கதைகளில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த நாவல் ஒரு சிறந்த விருந்து. வாருங்கள், சேரன் செங்குட்டுவன் காலத்து வஞ்சிமாநகரத்துக்குள் பயணிப்போம்!
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வஞ்சி மாநகரம் epub” Vanjimanagaram.epub – Downloaded 3015 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வஞ்சி மாநகரம் A4 PDF” Vanjimanagaram_A4.pdf – Downloaded 2993 times –செல்பேசிகளில் படிக்க
Download “வஞ்சி மாநகரம் 6 inch PDF” Vanjimanagaram_6_inch.pdf – Downloaded 1900 times –நூல் : வஞ்சி மாநகரம்
ஆசிரியர் : நா. பார்த்தசாரதி
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் : த.சீனிவாசன்
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 457
Leave a Reply