
“நீதியைத் தேடி – வாரன்ட் பாலா கட்டுரைகள்” என்ற இந்நூல், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.
சட்ட ஆராய்ச்சியாளர் வாரன்ட் பாலா, சட்டம் தொடர்பான தனது பத்து வருட ஆராய்ச்சியின் அடிப்படையில், சட்டத்தின் சிக்கல்களை எளிய முறையில் விளக்கியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் நேர்மையின்மை, பொய் வழக்குகள், லஞ்சம் போன்ற நீதித்துறையில் நிலவும் அவலங்களை இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.
தாத்தா மகாத்மா காந்தி மற்றும் பெரியாரின் சட்டம் தொடர்பான கருத்துக்களையும் இந்நூலில் காணலாம். தனக்குத் தானே வாதாட வழிகாட்டுதல், சட்ட உரிமைகள் மற்றும் கடமைகள், பிணை எடுப்பது எப்படி, சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்நூல் வழங்குகிறது.
பணத்தின் மீதான மோகம், தகவல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு, மக்களாட்சியின் தோல்விகள், கல்வி மற்றும் மொழி போன்ற சமூகப் பிரச்சனைகளையும் இந்நூல் அலசுகிறது. குடும்ப உறவுகள், குறிப்பாக மாமியார் மருமகள் பிரச்சனை போன்ற விஷயங்களையும் இந்நூல் தொடுகிறது.
சட்டம் தெரியாத சாதாரண மக்கள்கூட தங்களது பிரச்சனைகளுக்குச் சுயமாகத் தீர்வு காண இந்நூல் உதவும்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “நீதியைத் தேடி epub” neethiyaithedi1.epub – Downloaded 6790 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “நீதியைத் தேடி A4” neethiyaithedi-a4.pdf – Downloaded 12296 times – 14.08 MBசெல்பேசியில் படிக்க
Download “நீதியைத் தேடி 6inch” neethiyaithedi-6-inch.pdf – Downloaded 4370 times – 11.94 MBநூல் : நீதியைத்தேடி… IN QUEST OF JUSTICE… इंसाफ की तलाश में
கட்டுரை ஆக்கம் : சட்ட ஆராய்ச்சியாளர் வாரன்ட் பாலா & http://www.neethiyaithedy.org/
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன்
உரிமை : CC-BY-NC-ND. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம்.
இணையத்தில் படிக்க – http://neethiyaithedi.pressbooks.com/
புத்தக எண் – 191

Leave a Reply