
ஆண்டாள் அருளிய திருப்பாவை” என்னும் இந்த நூல், கோதை ஆண்டாள் இயற்றிய முப்பது பாடல்களைக் கொண்ட திருப்பாவையின் சிறப்பை விளக்குகிறது.
மார்கழி மாதத்தில், பாவை நோன்பின்போது பாடப்படும் இந்தத் தமிழ்மாலை, பக்தி இலக்கியத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூல், ஆண்டாளின் வாழ்க்கை, அவளுடைய கிருஷ்ண பக்தியின் ஆழம், பாவை நோன்பின் முக்கியத்துவம் மற்றும் திருப்பாவையின் ஆன்மீக மற்றும் இலக்கியச் செழுமை போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. திருப்பாவையில் வரும் ஒவ்வொரு பாடலுக்கும் எளிய விளக்கமும், உரையும், அதன் உட்பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஆண்டாள் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்கள், அன்றாட வாழ்வின் நடைமுறைகள், மற்றும் இயற்கை வருணனைகள் அனைத்தும் பக்தியுடன் கலந்த இலக்கிய நயத்தோடு அமைந்துள்ளன. ராமானுஜரின் திருப்பாவை மீதான ஈடுபாடும், அவர் கொண்ட பக்தியும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் திருப்பாவையுடன் தொடர்புடைய சம்பிரதாயங்களும், அதற்கான முக்கியத்துவமும் விளக்கப்பட்டிருக்கின்றன. மார்கழி மாதத்தின் சிறப்பையும், திருப்பாவையின் முப்பது பாடல்களையும் படித்து, ஆண்டாளின் பக்தியில் மூழ்கி, பேரின்பம் அடைய வாருங்கள்.
Download free ebooks
ஆன்ட்ராய்டு (FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை epub” Thiruppavai.epub – Downloaded 68983 times – 3.64 MBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை mobi” Thiruppavai.mobi – Downloaded 20299 times – 2.85 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை A4 PDF” thiruppavai_final_Lalu.pdf – Downloaded 58815 times – 7.90 MBகோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை.
ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும், ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப் படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம்.
ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள் ) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவள், தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாடச் சங்கதிகள் பல நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. காலை நேரத்தின் பலவித சப்தங்களையும், நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை, பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.
ஆண்டாள் அருளிய திருப்பாவை
பத்து பைசா பதிப்பகம்
சுஜாதா தேசிகன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு :FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International
புத்தக எண் – 28
சென்னை
பிப்ரவரி 1 2014





Leave a Reply