வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி

வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும். 

ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 – ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 – வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 

தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15

 

நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத்380 041. தொலைபேசி, +91-79-2754132,  இணையதளம்:www.navajivantrust.org 

மகாத்மாவின் பொற்காலம் 02-10-1869 முதல் 30-01-1948 வரை.

அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து தந்தைப் பெரியார்


வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள். இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.

நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும்எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத் தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விரு தொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.

சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம் பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்கு அனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.

இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும் மிகைப்பட கூறுவதாகாது.

நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.

பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக  கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையை ஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கிய பொறுப்பாளிகள் ஆவார்கள்.

வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.

இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.

சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப் பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும், வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.

வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத் துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.

இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக்  கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்து வருகிறது.

இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.

நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.

ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.

வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய் கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.

ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச் சொல்ல வேண்டுமா?

உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்றதென்றும், வெளிப் படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், ஈனத் தொழில்களே.

இத்தொழிலில் இவ்வளவு அக்கிரமத்திற்கான காரணமும், தீர்வும்

வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.

மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திட வேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும். 

ஆதாரம்: 10-05-1931 தேதியிட்ட குடியரசு வார இதழின் தலையங்கத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்.

தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை!

நாம் இயற்கையை அனுசரித்துப் போனால், இயற்கையாகவே சட்டம் நமக்கு உதவுகிறது என்பதால், வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை. இதனால், நியாயமான வழக்குகள் மட்டுமே என்னிடம் வர, பொய் வழக்குகள் எல்லாம், வராமல் போய் எனது வேலை மிக எளிமையாகி விட்டது. வக்கீல்கள் மத்தியில் என் மதிப்பும் அதிகமாகியது.

வழக்கு தரப்பினர்களிடம் நட்பு கொண்டு, பிளவுப்பட்டிருக்கும் அவர்களை ஒன்றாக்கி, சமரசம் செய்து வைப்பதுதாம் உண்மையான வக்கீலின் கடமை. இக்கடமையைத்தாம் இருபது ஆண்டுகள் ஆற்றினேன். சமரசம் என்பது, இருதரப்புக்கும் வெற்றியைத்தரும் அழகுணர்ச்சி என்பதால், வக்கீல்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைதானே தவிர, எவ்விதத்திலும் நட்டமில்லை.

வழக்கு செலவுக்கு மீறிய கட்டணத்தை வாங்கியதே கிடையாது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வழக்கு செலவுத்தொகையே எனது கட்டணம். வழக்கை நடத்த முடியாமல் போனால், வாங்கிய கட்டணத்தை திருப்பித் தந்து விடுவேன். வழக்கின் வெற்றி தோல்வியை வைத்து, கட்டணத்தை நிர்ணயித்ததில்லை. ஆனாலும், எதிர்பார்த்ததை விட, தொழிலும் வருமானமும் நன்றாகவே இருந்தது. எனது இவ்வருமான தொழிலைக் கூட, பெரிய மனம் படைத்தோர் சேவை என்றே கூறினர்.

கட்சிக்காரருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மற்றும் தண்டனையைப் பெற்றுத்தர தவறியதில்லை. அவமானம் என்பது குற்றம் புரிவதில்தாம் இருக்க வேண்டுமே தவிர, அக்குற்றத்திற்காக சிறை செல்வதில் அல்ல என்பதால், கட்சிக்காரருக்கு தண்டனையைப் பெற்றுத்தருவதும் நியாயமே.

அதேபோல, உரிமைகளுக்காக சிறை செல்லவும் தயாராய் இருக்க வேண்டும். எனது வாழ்நாளில், உரிமைகளுக்காக வருடக்கணக்கில் சிறையில் இருந்துள்ளேன்.

சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு.

தெரியாத சட்ட விசயத்தில், கட்சிக்காரர்களிடம், தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டதோ, வழக்கை நடத்தி தருகிறேன் என முன் வந்ததோ இல்லை. ஆனாலும், கட்சிக்காரர்கள் நானே நடத்த வேண்டும் என விரும்பினால், மூத்த வக்கீலிடம் ஆலோசனையைப் பெற உரிய கட்டணத்தைப் பெற்றும், உரிய ஆலோசனையைப் பெற்றும் நடத்திக் கொடுத்தேன்.

எனது திறமையை, சக்தியை பெரிய விசயங்களில் போராடுவதற்காக சேமித்து வைத்துக் கொண்டேன். பொது நலனுக்காக வழக்கு நடத்தியுள்ளேனே தவிர, எனது சொந்த வழக்கை நடத்தியதில்லை. ஒரே சமயத்தில் நான் ஏற்று நடத்திய எழுபது வழக்குகளில் ஒன்று மட்டுமே தோற்றது.

சத்தியமானது மலர் போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானது.

சரியாக சிந்திக்காத சொல் எதுவும் என் நாவில் இருந்தோ அல்லது பேனாவில் இருந்தோ வெளிவந்ததில்லை.

ஆதாரம்: மகாத்மா காந்தி அவர்கள் 1925 இல், தம்முடைய அறுபத்தி ஆறாவது வயதில் எழுதிய, சுயசரிதையான சத்தியசோதனையில் இருந்து ஒருங்கிணைத்து தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

சத்தியாக்கிரகத்தின் சக்தி!

சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று மீறுவதே, சத்தியாக்கிரகம்.

சத்தியாகிரகம் என்பது, தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை சட்டப்பூர்வமான முறையில் எதிர்த்து, அதற்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.

நியாயமற்ற சட்டங்களுக்கும், உத்தரவுகளுக்கும் பணிவது ஆண்மையற்ற செயல் என்பதை நாம் உணர்ந்திருந்தால், எந்தச் சட்டமும், உத்திரவும் நம்மை ஒன்றும் செய்திட அல்லது அடிமைப்படுத்தி விட முடியாது.

தனது உடமைகள், போலி கௌரவம், உறவினர்கள், மரணம் என எதற்கும் அஞ்சாதவர்களே, சத்தியாக்கிரகத்தை பின்பற்றவும், வெற்றியடையவும் முடியும்.

சத்தியாக்கிரகியின் அகராதியில், எதிரி என்ற சொல்லே இருக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் பொய்ச் சொல்ல ஏமாற்ற, துன்புறுத்தக் கூடாது. தனது உயிரைத் துறந்தாகிலும், பிறரது உயிரைக் காக்க வேண்டும்.

சத்தியாக்கிரக கைதி, தனக்கும் சாதாரணக் கைதிக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதக் கூடாது. சிறையில், சிறப்புச் சலுகை எதையும் பெறக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டில், சக கைதிகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்.

ஒரு சத்தியாக்கிரகி, வெளியில் இருப்பதை விட, சிறைக்குள் இருக்கும்போதுதான், தனது லட்சியத்துக்கான தகுதியைப் பெறுகிறார். எந்த அளவிற்கு, அகிம்சையோடு சிறை விதிகளை மதித்து நடக்கிறாரோ, அந்த அளவிற்கு கொள்கையில் உயர்வார்.

அகிம்சை என்பது, இம்சையை அறிந்தே அனுபவிப்பது.

ஒத்துழையாமை என்பது, அநீதிக்கு ஒத்துழைக்காமல் இருப்பது.

பலமும், அறிவும் உள்ள ஒரு சத்தியாக்கிரகி, தானே முன்வந்து அநீதிக்கு ஒத்துழைக்காது, இம்சைகளை ஏற்பதால் மட்டுமே, நீதியைக் காக்கவும், அவதூறுகளைப் போக்கவும் முடியும்.

சத்தியாக்கிரகம் ஒன்றே, சமத்துவம், சமாதானம், சமநீதிக்கான சரியான வழி. மற்றவை எல்லாம் அழிவுக்கான வழியே; பகையே!

ஆதாரம்: மகாத்மா காந்தி 1924 ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருந்த போது எழுதிய, சத்தியாக்கிரகம் என்னும் நூலில் இருந்து ஒருங்கிணைத்தும், சுருக்கியும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.




Category: தலையங்கம்

தலையங்கம்

கூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்

ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்களை நீதிபதிகள் என்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இவர்கள் நியாயத்தை திருடும் கொள்ளையர்கள், கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள் என்பதுதான் எனது ஆராய்ச்சி முடிவு.

ஆனால், இவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவ்வப்போது தெரிய வருகிறது. இந்த வகையில், இன்று இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.

இது நீதித்துறை குறித்து, (ந்)நீதித்துறையே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், யாரும் மறுக்கமுடியாது. ஆகையால், நிதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்கள் ஒருபோதும் மறக்கவும் கூடாது.

இதனையெல்லாம் நீதியைத்தேடிசாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்கிற நூலில், ‘‘நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள்’’ பகிரங்கமாகவே எழுதி அவர்களுக்கும் படிக்க கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையைத் தானே எழுதியிருக்கேன்னு, நிதிபதிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!

இதுல, இன்னொரு கொடுமை என்னான்னா, அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து பதவி காலத்திற்கு முன்பே என்னை விலக்கியதால், தனக்கு இருபது லட்சம் நட்டம் என்பதோடு, அறக்கட்டளை நிர்வாகிகளோ முப்பது லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார்கள் என்கிறார், வழக்கு போட்டவர்.

அறக்கட்டளைகளில் அறஞ்சார்ந்த செயல்கள் எதுவும் நடப்பதில்லை. தொண்டு என்கிற பெயரில் ஃபண்டை சுருட்டும் பணிதான் நடக்கிறது என்கிற எனது ஆய்வு முடிவும் அப்படியே அரங்கேற்றப்பட்டுள்ளன.

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி..பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத்தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.

லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு லஞ்சம்

நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:

பீதர் மாவட்டம் ஹூல்சூரில் உள்ள குருபசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995-ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். எனது பதவி காலம் முடிவதற்குள் பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவியில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ. 20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என் னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000-வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.

கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தேன்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Posted onDecember 25, 2014Categoriesதலையங்கம்Tagsகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்...3 Comments

பணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்!

இரவு 12 மணி

இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை.

மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.

தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது.

Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது. உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!

மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,

உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது,

ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,

பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள்.

திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!

அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!

ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை, சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை!

இந்த கனவும் அப்படித்தான் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!

பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய 

பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.

குறிப்பு: பொதுநலன் கருதி தலையங்கமாக வெளியிடப்படும் இந்த ஆக்கமானது, வெகுசில நாட்களாக சமூக வலைப்பக்கங்களில் உலா வருவதாகும்.

Posted onAugust 17, 2014Categoriesதலையங்கம்Tagsபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்!3 Comments

லட்சாதிபதியும், பிச்சாதிபதியும்!

காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க

கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்

நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்

இது புரியாமல் பணமிருந்தால் பத்தும் செய்யலாம், லட்சமிருந்தால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழலாமென என்கிற எண்ணத்தில், வாழ்க்கையை அலட்சியம் செய்து விதிமீறல்களை தெரிந்தே செய்கிறார்கள். இதனால், நம் வாழ்க்கை எவ்விதத்திலம் பாதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.

அடுத்தடுத்து என்ன செய்யலாமெனவும் திட்டந்தீட்டுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களது வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக அத்திருட்டு திட்டத்தில் தங்களது வாரிசுகளையுஞ் சேர்த்துக்கொள்கிறார்கள்.

உன்னுடைய திருட்டில் என்னை சேர்க்காதே என எந்த வாரிசும் சொல்வதில்லை. மாறாக, தந்தையே சேர்க்காவிட்டால் கூட, தகராறு செய்யும் வாரிசுகளாகவும், தேவைப்பட்டால் தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு தெரியாது சொத்துக்காக கொலை செய்தால், வாரிசு உரிமையை இழந்து விடுவோம் என்பதோடு, சட்டப்படி சொத்தும் கிடைக்காது என்பது!

கோடிகோடிக்கு அதிபதியாக இருந்தவர், நொடிப்பொழுதில் பிச்சைகாரன் ஆனார் என்பதோடு, விதிமீறல்களில் ஈடுபட்ட கேடியாகவும் ஆக்கப்பட்டு விட்டார், சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரும், அவரது வாரிசும்.

இவர்கள் அடுத்து எங்கு வலைத்துப்போடலாம் என்பது உட்பட எத்தனையெத்தனை திட்டங்களைத்தீட்டி, எத்தனையெத்தனை வண்ணக் கனவுகளோடு இருந்திருப்பார்கள்? எல்லாம் ஒருநொடிப்பொழுதில் நாசமாகி விட்டது. இந்த நாசத்தில் இருந்து இரண்டு மூன்று தலைமுறைகள் மீறுவதே (கு, )ஷ்டமப்பா!

இதற்காகவே இந்நேரம் பல பிணந்தின்னிப் பொய்யர்கள் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறேன் என அவர்களை நோக்கி படையெடுத்திருப்பார்கள்; இந்த வழக்கு நம்மிடம் விசாரணைக்கு வராதா என நிதிபதிகள் கணக்குப்போட்டு காத்துக்கொண்டிருப்பார்கள்!!

என்ன விதிமீறல் இருந்தால் நமக்கென்ன? நமக்கு இடம் கிடைத்தால் போதுமென அவ்வடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கியவர்கள், கட்டடத்தை கட்ட ஒப்புக்கொண்டவர்கள் என எத்தனையெத்தனை பேர் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?

இவர்களில் யாராவது ரமணா திரைப்படத்தை பார்க்காமலா இருந்திருப்பார்களா என்றால், வெளிமாநிலத்தில் இருந்து கூலிவேலைக்கு வந்தவர்களைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் எப்படி துணிந்தார்கள்?

இதையெல்லாம் தட்டிக்கேட்க நிஜத்தில் ரமணா வரமாட்டாரென சந்தடிச்சாக்கில் நக்கலடிக்கிறார்கள். சிலர், இவ்விடம் குறித்த பதிவுத்துறை வரைபடத்தை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறார்கள்.

ஆவணப்பதிவேடுகளாக இருப்பதையே தங்களுக்கு பாதிப்பென வரும்போது திருத்தும் அயோக்கியர்களான அரசூழியர்களுக்கு, இணைய வலைப்பக்கத்தில் இருப்பதை மாற்ற எத்தனை நிமிடங்கள் ஆகும்? கட்டிடம் இடிந்தது என தெரியவந்த அடுத்த நொடியே நிச்சயம் இதைத்தாம் செய்திருப்பார்கள்.

இவ்வளவு ஏன், பிரபல தனியார் தொழிற்நிறுவனமான டி.வி.எஸ் கூட, இதைத்தாம் செய்தது என்பதை பதிவு செய்துள்ள கட்டுரை விபரங்களை இங்கு சொடுக்கிப் படித்தறியலாம்.

நாங்களெல்லாம் மீட்பு பணியில் ஈடுபட்டோமெனவும், எங்களுக்கு சிலர் உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் பதிவு செய்கிறார்கள். இவர்கள் உண்மையில், மனிதாபிமானம் என்கிற வகையில், மெய்மறந்து இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனை தார்மீக கடமையென்று கருதுகிறார்கள். கடமையை மடமையாகவும், மடமையை கடமையாகவும் செய்பவர்களே ஏராளம். இதில், அரசின் பங்கு அதிகம்.

இது பொய்யர்கள் செய்யும் தொழில்போல!

ஆம், விதிமீறல் செய்யாதோர், இதுபோன்ற விதிமீறல்களில் சிக்கமாட்டார்கள் என்பதை கருத்தில்கொண்டு, ஒரேயொருமுறை மீட்புப்பணிகளில் ஈடுபடாமல் விட்டால் மட்டுமே, வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடுவோரையும், இதற்கு துணைபோவோரையும் கொஞ்சமாவது யோசிக்கச் செய்யமுடியும்.

இல்லாவிட்டால், இதற்கு முன்பாக இதுபோன்று எத்தனையோ இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருந்துங்கூட, இது நடந்திருக்குமா அல்லது இனியாவது நடக்காமல்தாம் இருக்குமா?

இதுபற்றி மேலோட்டமாக மேயாமல், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதன் நீதிமுறை அடிப்படை நோக்கமுங்கூட, இதுதாம் என்பது புரியும்!

ஆனால், இந்நீதிமுறையுங்கூட, பணத்தால் விதிமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடுங்காலமாகி விட்டதன் விளைவே, இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அடிப்படை காரணமாகிவிட்டது.

எனவே, முதலில் நீதிமுறையை ஒழுங்குபடுத்தால், எந்த விதிமீறலையுமம் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருனமிது. செயல்பட வேண்டியது தர்மம்.

இந்த வகையில், நியாயந்தான் சட்டம் என்பதை அடிப்படை தத்துவமாக எடுத்துக்கொண்டு, எனது சட்ட ஆலோசனைகளை ஆரம்பத்திலிருந்தே ஒழுங்குபடுத்த ஆரம்பித்ததன் விளைவே, எடுத்துக்கொண்ட கொள்கையில் கொஞ்சஞ்கொஞ்சமாக முன்னேற முடிந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, உங்க கருத்தென்ன என்பதை இதுவரை பதிவு செய்யவில்லையே என சில அன்பர்கள் வம்படியாக கேட்கிறார்கள்இப்படி உண்மையை எழுதி பலபேர்கிட்ட நான் திட்டுவாங்க வேண்டுமென்பதே, எனது கருத்தின்மீது அளவுகடந்த அன்புகொண்ட வம்பர்களது ஆக்கப்பூர்வமான ஆர்வமாக இருக்கிறது.

ஆமாம்ரமணா படத்தில் வருவதுபோன்று எல்லோரும் குடியேறிய பிறகு இச்சம்பவம் நடந்திருந்தால், விதிமீறலில் துணிந்து ஈடுபடுவோருக்கும், அதற்கு துணைநிற்போருக்கும் நல்லதொரு பாடமாக இருந்திருக்கும்

ஆனால் பாவம், இதையெல்லாம் அறியாத எங்கிருந்தோ வந்த பற்பல அப்பாவி தொழிலாளர்கள் வாழ்வை இழந்து விட்டனர்நாமும் விசாரணையில் சிக்குவோமென, இத்தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் கூட, மக்கி மண்ணாகி விடட்டும் என்று, அன்று எத்தனைபேர் வேலை செய்தார்கள் என சொல்லமாட்டார்கள்அடையாளங்காட்ட பயந்து அநாதையாக விட்டு விடுவார்களே?!

(, )றுதியாக, இப்படியொரு தலையங்கமெழுதும்  இவன் எவ்வளவு கேவலமானவனா, வக்கிரபுத்தியுடையவனா இருப்பான் என இப்போது நீங்கள் நினைத்தால், அடுத்து இதுபோன்றதொரு சம்பவம் நடக்கும்போது, இதிலுள்ள உண்மையை உணர்வீர்கள்.

Posted onJuly 2, 2014Categoriesதலையங்கம்Tagsபிச்சாதிபதியும்!லட்சாதிபதியும்Leave a comment

கயமையாளர்களாகும் கடமையாளர்கள்!

இவர் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், ஆதரவற்று தெருவில் கிடக்கும் நபர்களுக்கு உணவு வழங்கி வந்தவர். உணவு வழங்குவது ஒகே. ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது உள்ளிட்ட அனைத்து பில்டப்பும் தேவையற்றது என நம்பினேன்.

அதெல்லாம் எதற்காக (உன்னை கொல்லப்போகும் பாவத்திற்காக என்னை மன்னித்துவிடு) என்பது இப்போது புரிந்துவிட்டது.

சாலையோரங்களில் வசித்தபோது கூட இறக்காத அளவிற்கு, ஆசிரமத்தில் ஒரு மாதத்திற்கு இவ்வளவுபேர் இறந்தால், அது எப்படி ஆதரவற்றோருக்கு உணவளிப்பதும், இறப்பதும் ஆகும். அப்பெண் சொல்வதுபோல, கொலைதானே என்கிற சந்தேகம் எழாமலில்லை.

இப்படி துணிந்து குற்றம் புரிபவர்களுக்கு பின்னால், யாரோவொரு உயர்மட்ட அரசூழியர் இருப்பார் என்பது மட்டும் உறுதி! 2010 ஆம் ஆண்டில்இவரை சி.என்.என் நிறுவனம் கதாநாயகனக தேர்ந்தெடுத்தது. இவர் விக்கிபீடியாவில் வேறு இடம் பிடித்துவிட்டார்.

நக்கீரனலிருந்து ……
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், பிறந்த மேனியோடு, கதறியபடி ஓடி வந்த அந்த இளம்பெண்ணை முதலில் பார்த்தவர்கள் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள்தான்.

அக்ஷயா ஆசிரமத்தின் காம்பவுண்டின் சுவரை எகிறிக்குதித்து ஓடி வந்ததை அவர்கள் பார்த்தார்கள்.. ‘‘நான் மெண்டல் இல்லை. மத்த பொண்ணுங்களை கொலை செஞ்ச மாதிரி என்னையும் சாகடிக்கிறதுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் அக்கா..அம்மா.. என்னைக் காப்பாத்தி ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க.”

இந்தாம்மா.. முதல்ல இதை உடம்புல சுத்திக்கதங்கள் தலையில் சுற்றியிருந்த சாயத் துண்டுகளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து நிர்வாணத்தை மறைக்க வைத்தார் கள், அன்றைய வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பத் தயாராக இருந்த அந்த 100 நாள் வேலைப் பெண்கள்.

மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், சோழவந்தான் அருகில், நாகமலை புல்லூத்து என்ற இடத்தில், ஆடம்பரமாக காட்சியளிக்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத்தி லிருந்து கூப்பிடு தூரத்தில், 5.6.14 வியாழன் மாலை 4 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

அக்ஷயாவில் இருந்து ஊர் தப்பிவந்த ஆயிஷா என்ற அந்த இளம்பெண்ணை தங்களோடு அழைத்துச் சென்று, சேலை ரவிக்கை அணியவைத்து, சாப்பாடு கொடுத்து, கிராம நல அலுவலர் உதவியோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் கொடிமங்கலம் மக்கள்தான். கொடிமங்கலம் மக்களின் பாதுகாப்பில் இருந்த அந்தச் சிறுபொழுதில் ஆயிஷாவைச் சந்தித்தோம். எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல பேசினார்.

அக்ஷயா ஆசிரமத்தில் நடக்கிறது சேவையோ தொண்டோ கிடையாது. அவங்க, அநாதைகளின், மன நிலை சரியற்றவர்களின் உடல் உறுப்புகளை வியாபாரம் செய்றாங்க. அங்கே இருக்கிற என்னை மாதிரி இளவயசுக் காரங்களை சுயமா யோசிக்க விடமாட்டாங்க. தினமும் மூணு தடவை போதை ஊசி போட்டு மிதக்க விடுறாங்க. அசிங்கமா பேசுறதா நெனைக்காதீங்க. இப்ப ஏழெட்டு நாளா எனக்கு உமட்டுது. வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கர்ப்பமா இருக்கிறேனோ அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு.

ஆசிரமத்தில் பாதி சாமத்தில பெண்கள் அலறுவாங்க. பயமாயிருக்கும். எழுந்து ஜன்னல் வழியா பார்ப்பேன்அடுத்த அறையில வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்கிறது தெரியும். இல்லைனா நிர்வாணமா ஆடச் சொல்லி படம் எடுப்பாங்க. டிரஸ்ஸை கழட்ட மறுக்கிற பெண்களை ரெண்டு மூணு தடியனுங்க அடிப்பானுங்க. அந்தப் பொண்ணுங்க அடிதாங்க முடியாம கதறுங்க. இதெல்லாம் மிட் நைட்லதான் நடக்கும்

அப்புறம், வாரம் ஒருமுறையாவது யாராவது ரெண்டு ஃபாரீன்காரங்களை ரமேஷ்ன்ற தடியன் கூட்டிட்டு வருவான். அந்த வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எங்களை வரிசையா நிக்கவச்சு பார்ப்பாங்க. எங்கள்ல இருந்து ரெண்டு மூணு பேரை அவங்க காட்டிட்டு போவாங்க. அடுத்த ரெண்டுநாள்ல, அவங்க காட்ன ரெண்டு மூணுபேரும் பிணமாயிடு வாங்க. சாகிறவங்க எல்லாரும் நைட்லதான் சாவாங்க. அது சாவு இல்லை, கொலை. மயக்க மருந்து கூட கொடுக்காம உறுப்புகளை அறுத்தெடுக்கிற கொலை. ராத்திரி யோட ராத்திரியா புதைச்சிடுவாங்க. இல்லைனா எரிச்சிடுவாங்க.

4- ஆம் தேதி புதன்கிழமை பகல்ல ஒரு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்தான் ரமேஷ். அந்த வெள்ளையன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனான். அப்பவே எனக்கு பயம் வந்திருச்சு. என்கூட இருந்த பொண்ணுங்க… “ஆயிஷா உனக்கு அஞ்சாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அதான்அதாண்ணே அஞ்சாம் தேதி சாயந்தரமேகுளிக்கிறதாச் சொல்லிட்டு, யூனிபார்மை கழட்டிப் போட்டுட்டு, ஓடி வந்து இவங்க கிட்ட அடைக்கலம் புகுந்தேன்!” குளமான கண்களைத் துடைத்தபடி சொல்லி முடித்தார் ஆயிஷா.

ஆயிஷா சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கொடிமங்கலம் ராஜாமணியிடம் கேட்டோம்.

நிச்சயமாக சொல்றேன். அக்ஷயா ஆசிரமத்தில் ரொம்ப தப்பு நடக்குது. மதுரை பெரியாஸ்பத்திரியில் கூட இவ்வளவு பேர் சாகிறதில்லை. மாதத்துக்கு கொறஞ்சது இருபது இருபத்தஞ்சு பிணங்களை நாகமலை சுடுகாட்ல எரிக்கிறாங்க. அல்லது புதைக்கிறாங்க. எஸ்.எஸ்.காலனியில சாதாரணமா இருந்த ஒரு ஆளு2 கோடிக்கு நிலம் வாங்கி கோடிக்கணக்கில் செலவழிச்சு கட்டடங் களை கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆயிரம் பத்தாயிரம் லட்சம்னு வாரிக் குடுக்கிறதா சொல்றாங்க. நிச்சயமா அங்கே பெரிய கிரைம் நடக்குது!” வியப்பின்றிச் சொன்னார் ராஜாமணி.

ஆயிஷாவுக்கு சேலை ரவிக்கை கொடுத்த லீலாவதியிடம் கேட்டோம். “பாவம்ங்க இந்த ஆயிஷாஅது கத்திக்கினு ஓடியாரதைப் பார்த்தப்போ எங்க ஈரக்கொலையே ஆடிப்போச்சு. பாதிச் சாமத்தில அந்த ஆசிரமத்தில பொண் ணுக அலறுற சத்தம் நல்லா கேக்கும். ஆனால் நாம யாரும் அதுக்குள்ள போகவே முடி யாது. இப்பக் கூட பாருங்க. போலீஸ் ஆபீசர்களைக் கூட உள்ளே விடமாட்டேன்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே!” என்றார் லீலாவதி.

மாதம் இருபது முப்பது பிணங்கள் எரிக்கப்படுவது உண்மையா?

பொறுப்பு வி...வாக இருக்கும் திரவியத்திடம் கேட்டோம்.

பழைய வி...வும், உதவியாளரும் கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50-க்கும் அதிகமான சாவுகள் என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்என்றார் அவர்.

அக்கம் பக்கக் கிராமங்களின் மக்களும், ஆயிஷாவும் சொல்லும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டு நிற்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத் துக்குச் சென்றோம்.

டி.எஸ்.பி. சாந்த சொரூபனையே உள்ளே அனுமதிக்க முடியாதென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். கிராம மக்களின் ஆவேசத்தை தாங்க முடியாமல் தான் கடைசியில் மெயின் அலுவலகம் வரை போகலாம் எனத் திறந்து விட்டார்கள்.

அக்ஷயா ஓனர் திருமதி வித்யா கிருஷ்ணய்யரை சந்தித்தோம்.

அநாதைகளை, மனநலமற்றவர்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் இது. இந்த ஆயிஷாவும் கொடிமங்கலம் மக்களும் எங்க மீது ஏன் இப்படி அபாண்டமா சொல்றாங்களோ தெரியலை. அனாதைப் பிணங் களை வி...விடமும் தலையாரியிடமும் சொல் லிட்டுதான் அடக்கம் செய்றோம். மற்றபடி கிட்னியெல்லாம் திருடமாட்டோம்ங்க!” சற்றே எரிச்சலோடு சொன்னார்.

அதன்பிறகு, அந்த அக்ஷயாவுக் குள் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சாந்த சொரூபன், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சுரேஷ், ஆர்.டி.. ஆறுமுக நைனார், சப்-கலெக்டர் ஆர்த்தி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, வட்டாட்சியர் முத்துராமலிங்கம் என அதிகாரிகள் பலர் சென்று வந்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் வாய்திறக்க மறுத்தார்கள்.

ஆர்.டிஓ. ஆறுமுக நைனார் மட்டும் நம்மிடம், “துறை ரீதியான விசாரணை தொடருது. போஸ்ட்மார்ட் டம் செய்யாமல், போலீசுக்கு தெரி விக்காமல் 15 சடலங்களை எரித்ததை ஒப்புக்கொண்டார்கள். மற்றபடி போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்!” என்றார்.

அக்ஷயா தொண்டு நிறுவனத் திற்குள் போலீசார் போவார்களா? “இன்னமும் எஃப்..ஆர். போடலீங்க. கேட்டம்னாஅந்தப் பைத்தியக்காரி சொல்றதை எப்படி நம்புறதுனு கேக்குறாக. யாரோ ஒரு .பி.எஸ். அதிகாரியோட சப்போர்ட் அக்ஷயா கிருஷ்ணய்யருக்கு இருக்கு. அது யாருனு தெரியலையே!” என்கிறார்கள் கவலையோடு கொடிமங்கலம் மக்கள்.

Posted onJune 19, 2014Categoriesதலையங்கம்Tagsகயமையாளர்களாகும் கடமையாளர்கள்!3 Comments

மகத்தான மக்களாட்சி மலர!

உலகில் மற்ற எந்த நாடுகளும் வழங்காத சாதி, மதம், இன, பேத, மொழி ஆகியவைகளை கடந்து ஒருவர் எந்த மதத்தை, இனத்தை, மொழியை, நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அவர்களுடைய நாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அவ்வுரிமைகளை எல்லாம் அப்படியே வழங்கிய ஒரே நாடு என்பதால்தான், உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குறியதாக திகழ்கிறது, நமது இந்திய தாய்திருநாடு.

ஆனால், உண்மையில் மக்களாட்சி நடக்கிறதா என்றால், மக்களாட்சி என்கிற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் அவ்வேட்பாளர்களது மனைவி, துணைவி, மக்கள் என நடக்கிறது என்பதே கேள்வியும், பதிலுமாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் புலம்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இதிலும், ஆளுங்கட்சிகளே அதிகமாக புலம்பும் அளவிற்கு, ஐந்து வருடம் செய்த ஆட்சியின் நம்பிக்கையின்மை இருக்கிறது.

மக்களாட்சி என்றால், மக்களால் பொதுத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், மக்கள் ஏன் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள்? என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை பலரும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, மக்களாட்சி அரசாங்கத்தை அமைக்க, மாபெரும் பொறுப்புல்ல தேர்தல் ஆணையமே அறியாமல்தான் இருக்கிறதா அல்லது அறிந்தும், அறியாதது போல நடந்து கொள்கிறதா என்பது தெரியவில்லை.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 19(1)()-இல், சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்தான், சங்கங்கள் மட்டுமல்லாது, அறக்கட்டளைகளும், இயக்கங்களும், மக்களாட்சி அரசை நிறுவ போட்டாப்போட்டி போடும் அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன.

இப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை, இயக்கம், அரசியல் கட்சியில் முக்கியமானதொரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றால், பொதுக்குழுவை கூட்டி, அதன் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை அவசியம் பெற வேண்டும். இதனை ரத்தினச் சுருக்கமாக பெரும்பான்மை பலம் என்பார்கள். இப்பலத்தை பெறவில்லை என்றால், அம்முக்கிய முடிவு நிறைவேறாது முடங்கிப் போய் விடும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சங்கதியே, மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெற வேண்டிய சங்கத்தில், இயக்கத்தில், கட்சியில் கூடும் அனைவருமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பார்கள் அல்லது முக்கிய முடிவை எட்ட வேண்டிய பிரச்சினைக்கு உரிய சங்கதியைப் பொருத்தமட்டில் சிறுபகுதியினர் கருத்து வேறுபட்டவர்களாய் இருப்பார்கள்.

இதில், மேன்மேலும் சச்சரவு வரவோ, வளரவோ கூடாது என்ற அடிப்படையில்தான், முன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை முடிவு நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க போட்டா போட்டி போடும் கட்சிகளைப் பொருத்தவரை நாற்காலி கொள்ளைக்காக, கூட்டணி போடுகிறார்களே ஒழிய, அடிப்படை கொள்கைக்காக அல்லவே அல்ல என்பது நானறிந்த விசயமட்டுமன்று; ஊரறிந்த உண்மைதான்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தோடு, தேர்தலுக்கு தேர்தல், மாறிமாறி ஆட்சி செய்யும் இருகட்சிகளில் எக்கட்சியில் நம்மைப் போலவே யார்யார் கூட்டு சேருவார்கள் அல்லது சேருகிறார்கள், அதில் எக்கூட்டணி வெற்றி பெறும் என்பதை மட்டுமே கணித்து, கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் நாளொரு நட்பு, நடப்பு நிலைப்பாடு நாடே அறிந்த விசயம்தான்.

இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி என எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்றாகி விட்டது.

ஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம் இதுவரையிலும், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி செய்ததில் எப்போதுமே தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விளங்கும் இருகட்சிகளுக்கு மட்டும் இதுவரையிலும் பொருந்தாமல் போனது ஏனோ?!

இனி பொருந்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும் மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம், மாறி மாறித்தரும் பெரும்பான்மையும், அங்கீகாரமுமே ஆகும்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம், இது வரை தனிப்பெரும்பான்மையோடு நாட்டை ஆட்சி செய்துள்ள எதிரெதிர் பிரதாண கட்சிகளு க்கும் பொருந்தி விட்டால், மகத்தான மக்களாட்சிக்கும் மக்களுக்கும் பிரச்சினையே இல்லை.

நம் நாட்டைப் பொருத்தவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு சிலவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் ஆயிரத்து முன்னூறு உள்ளன என்பது தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கை. அரசியல் கட்சிகளின் பதிவு என்பதும், அங்கீகாரம் என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானது.

சங்கத்தையோ, அரசியல் கட்சியையோ சட்டப்படி பதிவு செய்ய குறைந்தது ஏழு பேர் இருந்தாலே போதுமானது. ஆனால், அங்கீகாரம் என்பது அப்படியல்ல. அச்சங்கத்தை அல்லது கட்சியை அதனோடு உறவாடுவோர்கள் அங்கீகரிக்க வேண்டும். தமக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அல்லது நடந்து கொள்ள முயலும் என முதலாளி நம்புகிற தொழிலாளர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அங்கீகரிக்கிறாரோ அதுபோலவே, நமக்கு நல்லது செய்யும் என நம்புகிற கட்சியை பெரும்பான்மையான மக்கள் தேர்தலின் மூலம் அங்கீகரித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த கட்சிகளோ, பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து, தடுத்த நிறுத்தும் எதிர்கட்சிகளாக இருக்கும். இப்படி, எதிர்கட்சியாக தனது கடமையை செவ்வனே செய்த அரசியல் கட்சிகள் தாம் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் சாதாரணமாகவே அங்கீகரிக்கப்படும் அல்லது சாதனையாக பெரும்பான்மையோடு ஆட்சியில் கூட அமர்த்தப்பட்டுள்ளது.

இதிலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற தகுதியை பெறுவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஓர் கட்சியானது, ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பதிவான ஒட்டு மொத்த வாக்குப்பதிவில் குறைந்தது 6% வாக்கைப் பெற வேண்டும் என்பது அங்கீகாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோளாகும்.

இந்த அளவுகோளின்படி, இன்றைய நிலையில், அதாவது கடந்த பொதுத்தேர்தல் முடிவின்படி, தேசிய அளவில் ஏழு கட்சிகளும், தமிழ்நாடு மாநில அளவில் மூன்று கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் அல்லது காலா காலத்திற்கும் காத்திருக்கப் போகும் கட்சிகளே என்ற நிலையில்தான் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாமே உள்ளன என்றால் மிகையல்ல.

ஏனெனில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் எல்லாம், தேர்தல் வரும் போது, பிரபல கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அல்லது பிரபல கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டாலே நாம் பிரபலமடைந்து விடுவோம், மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவோம் என்ற குறுட்டுத்தனமான நம்பிக்கையில்தான் இருக்கிறார்களே ஒழிய, வளர்ந்த கட்சிகள் எப்படி வளர்ந்தன? மக்களால் எப்படி அங்கீகரிக்கப்பட்டன? என்பதை ஆராய்ந்தறிந்து அதற்கு ஏற்றபடி, மக்களுக்கான களப்பணியை ஆற்றுவதில்லை.

மாறாக, வளர்ந்து விட்ட அக்கட்சிகள் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனவோ, அதே நிலைப்பாட்டில் தங்களையும் ஒத்த கருத்துள்ளவர்களாய் கூட்டணி கட்சியை தேவைப்படும் போது அல்லது ஆட்சிக்கு ஒருமுறை என மாறிமாறி மாற்றிக் கொள்வதனாலேயே, தேர்தல் களத்தில் தனிப்பெரும்பான்மையோடு வெல்வதும் இல்லை. இனியும் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவதும் சாத்தியமில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியல்லாது மக்களுக்கான களப்பணியோடு, தனியாத அரசியல் ஆர்வத்தில், தனியொரு நபராக, சுயேட்சையாக போட்டியிடும் தன்னார்வலர்களை, எங்கே தங்களைவிட்டு போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து தேர்ந்தெடுப்பதில்லை.

அப்படியே அங்கீகரித்து அனுப்பி வைத்தாலும் கூட, பத்தோடு ஒன்னு, பதிணொன்னு. அத்தோடு இதுவொன்னு என்ற நிலையில்தான் செல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய, சுயேட்சையாக போட்டியிட சுயமாக முடிவெடுத்தது போல், சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எதையுமே சுயமாக செய்ய முடிவதில்லை.

போட்டி என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சரிநிகர் சமம் என்ற அடிப்படையில் வயது, எடை, அறிவு போன்ற ஏதோவொரு வகையில் ஒத்திருக்க வேண்டும் என்பதே நியாயமானது என்பதால், அதுவே விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தகுதிக்கான அளவு கோலாக நிர்ணயிக்கப்படுகிறது.

விளையாட்டாக விளையாடும் விளையாட்டுக்கே இப்படி தகுதி நிர்ணயிக்கப்படும் போது, அரசாள போட்டி போடுபவர்களுக்கு அனைத்து விதத்திலும் சரிநிகர் சமமான தகுதியை நிர்ணயிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமையல்லவா?

ஆனால், அரசாள போட்டி போடும் அரசியல் கட்சிகளின் போட்டியைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நியாயமான எவ்வித தகுதியுமோ போட்டியாளர்களுக்கு நிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம், தங்களின் வலிமையை, பலத்தை, தகுதியை, தன்னைவிட அனைத்து விதத்திலும் தகுதியில் குறைந்த சாதாரண எதிர்கட்சி வேட்பாளரிடம் போட்டி போட்டு நிலைநாட்டும் வெற்றி எப்படி உண்மையான, சரி நிகர் சமமான நியாயமான வெற்றியாக கருத முடியும்?

ஆனாலும், மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த வேதனையான வெற்றிகள் எல்லாம் கடந்த காலங்களில் ஐம்பதாண்டு சாதனைகளாக சட்டப் பேரவையிலேயே கொண்டாடப் பட்டுள்ளது. இவர்களின் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, இவர்களே முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்கள்.

உண்மையில், கட்சியின் தலைவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில், யாராவது வெற்றி பெற்றால் மட்டுமே, அது மாபெரும் வெற்றியாகும். இப்படியும் கூட, நடக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். இதுவும், தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளது.

எனவே, நியாயமாக பார்க்கப்போனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒரே தொகுதியில் போட்டியிட தேவையான சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சித்தலைவரின் கட்சி வெற்றி பெறும் போது மட்டுமே, அவர் தலைமையிலான ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும்.

ஒருவேளை கூட்டணிக்கட்சி தலைவர் வெற்றி பெற்றால், அவர் தலைமையில் ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும். இவ்விரண்டு சாதக சூழ்நிலைகளும் இல்லாத போது, அதற்கான மாற்று வழிவகைகளையும் செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலமே, தொங்கு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற கூட்டணி ஆட்சியில் நிகழும் குழப்பங்களான, எங்களுக்கு இத்தனை மந்திரி பதவி வேண்டும் அல்லது எங்கள் தலைமையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் அல்லது எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்த நேரத்திலும் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி கொள்வது மற்றும் பெரும்பான்மையைப் பெற மற்ற கட்சிகளுக்கு விலை பேசுவது போன்ற பல்வேறு கூட்டணி குழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பிரபல கட்சித் தலைவர், தன்னை விட தகுதி குறைந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக அல்லது பிரதம அமைச்சராக பொறுப்பேற்பது, மக்களாட்சிக்கான பொதுத்தேர்வு என்னும் பொதுத்தேர்தலில் அடிப்படையில் நிகழும் முதல் தோல்வி என்றால், தேர்தலின் முடிவில் உண்மையில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியே, மறைமுகமாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பது மக்களாட்சியின் முடிவான தோல்வியாக இருக்கிறது. எப்படி?

ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முடிவில் ஒருகட்சியோ அல்லது ஒருகட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகளோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நேர்வுக்கு ஏற்ப அதிகாரம் மிக்க ஆளுநரால் அல்லது குடியரசு தலைவரால் வெற்றி பெற்ற அக்கட்சி அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆட்சியை அடிப்படையில் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். அப்படியானால், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், விலையை ஏற்றினாலும், ஏற்றாவிட்டாலும், தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பொறுமையாக ஏற்றுக் கொள்வதுதானே வாக்களித்த மக்களின் கடமை!

ஆனால், உண்மையில் மக்களாட்சியில், மக்களாட்சிக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன? ஆட்சியாளர்கள் விலையை ஏற்றினாலோ அல்லது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலோ போராட்டம், ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற சட்டத்துக்கு உட்படாத செயலில் இறங்குவது ஏன்?

இப்படி இறங்கியவர்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக தங்களின் தவறுகளை, சட்ட விரோத செயல்களை சரி செய்து நல்லதொரு மக்களாட்சியை, மக்களுக்கு விருப்பமான ஆட்சியை நிலைநாட்டுவதுதானே ஆட்சியாளர்களின் கடமை?

ஆனால், உண்மையில், கடந்த காலங்களில் நாமறிந்தவரை என்ன நடந்துள்ளது? மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையை பெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்? இதுதான் வாக்களித்தமைக்கு கொடுக்கும் பரிசா?

முன்னுக்கு பின் முரணான இவ்விரண்டு செயல்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் என்ன என அடிப்படையில் ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு, மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அம்மக்களை ஆள ஆட்சியில் அமர்த்தப்பட்டிருப்பது பெரும்பான்மை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதே!

உண்மையாக, தேர்தலில் நான்கு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போடுவதாகவும், நூறு சதவிகித வாக்குகள் பதிவாவதாகவும் எடுத்துக் கொள்வோம். இதில் முதல் கட்சிக்கு 27 வாக்குகளும், இரண்டாவது கட்சிக்கு 25 வாக்குகளும், முன்றாவது மற்றும் நான்காவது கட்சிக்கு சராசரியாக தலா 24 வாக்குகளோ அல்லது ஓரிரு வாக்குகள் ஏறக்குறைய வாக்குகளாகவோ பதிவாகிறது என்று எடுத்துக் கொள்வோம்.

இங்கு 27 வாக்குகளைப் பெற்ற முதல் கட்சிதானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்ய அமர்த்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இப்படி அமர்த்தப்படும் கட்சியை எதிர்த்து மற்ற மூன்று கட்சிகளுக்கும் வாக்களித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73 நபர்கள் அல்லவா?

இப்படி, பெரும்பான்மை எதிர்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியாக இருக்க முடியும்?

நான்கு கட்சிகள் போட்டி போட்டு, பொறுப்புணர்வோடு நூறு சதவிகித வாக்குகள் பதிவாகும் மக்களாட்சியே, உண்மையான மக்களாட்சியாக இல்லாத போது, கணக்கிலடங்கா கட்சிகளோடு, சுயேச்சைகள் வேறு போட்டி போடும் பொதுத்தேர்தலில், அதிகபட்சமாக சற்றேறக் குறைய எழுபது சதவிகித வாக்குகளே பதிவாகிற வாக்குப்பதிவில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதியில்லா மின் வாக்குப்பதிவு, கள்ள வாக்கு, இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும் வாக்கு, இலவசங்களை கொடுத்து இலவசமாக பெறும் வாக்கு, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக பதிவாகும் வாக்கு என பல்வேறு தரப்பட்ட வாக்குப்பதிவுகளின் மூலமே வெற்றி பெற்று நடைபெறும் ஆட்சி எப்படி மாண்புமிக்க மக்களாட்சியாக இருக்க முடியும்?

மாறாக, நிச்சயமாக, மனசாட்சி இல்லாத, மக்களின் மதிப்பை பெறாத ஆட்சியாகத்தானே இருக்க முடியும். அன்றன்று; அப்படித்தானே இருக்கிறது. அப்படியானால், உண்மையான நியாயமான, மகத்தான மக்களாட்சி மலர இதில் நாம் சொல்லும் சீர்கேடுகள் எல்லாம் இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக களையப்பட வேண்டும்.

இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைப்பெற்ற தேர்தல்களில் எல்லாம் செலுத்தியதை விட, தனது சுய அதிகாரத்தை தேர்தல் ஆணையம், தற்போதைய பொதுத்தேர்தலில் முழு முனைப்போடு செலுத்தி, மகத்தான மக்களாட்சி மலர முதற்கட்டமாக களமிறங்கி, சீர்கேடுகளை களையெடுக்க முயற்சிக்க வேண்டும்.

Posted onApril 4, 2014Categoriesதலையங்கம்Leave a comment

தவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்!

நாம் மாணவர்களாக இருந்த போது, படிச்சி வக்கீலாகப் போறியா, டாக்டராகப் போறிய, இஞ்சியராக போறிய என பல்போன பொக்கைவாய் பாட்டி கூட கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி கேட்பது தற்போது குறைந்து, சாப்பிட்டு வேர் இஞ்சினியர் ஆகப் போறியா என கேட்க தொடங்கி விட்டார்கள்.

இப்படி யாராவது என்ன முன்பாக கேட்டால், படித்து பொய்யனாக போறியா, கொலைகாரனாக போறியா, மோசடிக்காரனாக போறியா என்று மாற்றி கேளுங்கள் என்பேன் அல்லது அவர்கள் முன்பாக நானே கேட்டு விடுவேன்.

பொய்யர்கள் அதிகமாக, அதிகமாக குற்றங்களும் அதிகமாகின்றன. பொய்யர்களே குற்றவாளி களாகவும், சட்டந்தெரியாத கோமாளிகளாகவுந்தாம் இருக்கிறார்கள். இதேபோல், மருத்துவர்கள் அதிகமாக, அதிகமாக நோய்கள் அதிகமாகின்றன. மருத்துவர்களே பல்வேறு நோயாளிகளாகத்தாம் இருக்கிறார்கள். இதுகுறித்து என்னை போன்றவர்கள் கேள்வி கேட்டால், நாங்களும் மனிதர்கள்தாம் என்பார்கள்.

ஆனால், இவ்வுலகத்தில் எங்களைவிட புத்திசாலிகள் யாருமேயில்லை; நாங்களெல்லாம் கடவுளுக்கு நிகரானவர்கள் என ஒன்றுமறியாத அப்பாவிகளிடம் பீற்றிக்கொள்வார்கள். உண்மைதாம், இவர்களைவிட திறமையாக நம்பிக்கை மோசடி செய்பவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆகையால், இத்தொழில்களை செய்பவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளே கிடையாது. மாறாக, ஈனப்பிறவிகளே!

நமது வீட்டுக்குள்ளே உலகத்தை கொண்டுவரும் அளவிற்கு வளர்ந்து வந்த தகவல் தொழிற்நுட்பம், திடீரென யாரும் எதிர்பார்க்காத சரிவைக்கண்டு, ஒரே நொடியில் உலகெங்கும் கோடிகணக்கானோருக்கு வேலையில்லாமல் செய்தது.

தகவல் தொழிற் நுட்ப புரட்சியால்தால் உலகம் எல்லா விதத்திலும் முன்னேறியுள்ளது, அதீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்த தகவல் தொழிற்நுட்பம் எது எதில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நம்நாடு உள்ளது.

எது ஒன்றையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் போது அது குறித்து சர்ச்சைகள் ஏதும் எழுவதில்லை. அது குறித்து யாரும் சிந்திப்பதும் இல்லை. தவறாக பயன்படுத்தும் போது அதுகுறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள், சிந்தனைகள் எல்லாம் இயல்பாகவே எழுகின்றன.

பொதுவாக எந்த ஒரு துறையாக இருந்தாலும் அத்துறைப் பற்றி ஒரளவேணும் மற்ற துறையில் அல்லது மாற்று துறையில் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மற்ற சாதனங்களை பயன்படுத்துவதை விட தகவல் தொழிற்நுட்ப சாதனங்களை மக்கள் பயன்படுத்தாத வினாடிகளே இல்லை என்கிற அளவிற்கு அதன் அதீத வளர்ச்சி கடைக்கோடி சாமானிய மனிதனைக் கூட சென்றடைந்துள்ள இந்த கால கட்டத்தில், ‘‘அதில் ஏற்படும் பிரச்சினைகள், குளறுபடிகள் குறித்து மற்ற சாதனங்களில் புரிந்து கொள்வதைப் போல புரிந்து கொள்ள, அத்துறை சார்ந்தவர்களைத் தவிர வேறு யாராலும் முடிவது இல்லை என்பதை விட, பெரும்பாலான சமயங்களில் அவர்களாலேயே கூட முடியவில்லை என்பது அனைவரும் அறிந்த நிதர்சனம்’’.

உலகளாவிய சட்ட விழிப்பறிவுணர்வுக்காக நீதியைத்தேடிஇணையப்பக்கத்தை நிர்வகித்து வரும் நான், சமூக வலைதலங்களில் வரும் புகைப்படங்கள், காணொலி காட்சிகள் எல்லாம் எப்படி எப்படியோ சித்தரிக்கப்படுகின்றன என்பதை அறிவேன்.

பன்பாடு இல்லாத மேற்கத்திய மற்றும் நம்மவர்களது பாலியல் காட்சிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை என்பதை இணையத்தில் உலாவரும் ஒவ்வொருவரும் அறிவர். இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் குற்றங்களை மட்டும் தடுக்க நினைப்பதும், நிதிபதிகள் குற்றவாளிகளை தண்டிக்க நினைப்பதும் கையாளாகாத்தனமே தவிர, துடிப்பான தடுப்பு நடவடிக்கை அன்று.

மின்னஞ்சல் மற்றும் உலாப்பேசிகளுக்கு வரும் பரிசு, அவார்டு, லாட்டரி குறித்த மோசடி செய்திகளை யார் அனுப்புவது, எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை கண்டு பிடிக்க இயலாமல் சைபர் கிரைம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளும் எச்சரிக்கையாக இருக்கவே மக்களுக்கு போதிக்கின்றன என்பதில் இருந்து அவர்களின் கையாளாத்தனம் தெரிகிறது. மத்திய அரசின் முக்கிய இணையதளங்களையே முடக்கி காட்டியிருக்கிறார்கள்.

இன்றும் நம்ம ஊரில், குடிசை தொழில்களில் ஒன்றாக விளங்கும் பீடி சுருட்டுவது போல, சீனாவில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்து பொருட்களும் குடிசை தொழிலாகவே தயாரிக்கப் படுவதாக சொல்கிறார்கள். நம் சந்தைக்கு பெருமளவில் வந்து குவியும் விதவிதமான இப்பொருட்களையும், அதன் மலிவு விலைகளையும் பார்த்தால் குடிசை தொழில் உண்மை என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

இப்படி தகவல் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்களை கொண்டுதாம், டெகல்கா, சேனல் 4 போன்ற ஊடகங்கள் சர்ச்சைக்கு உரிய ஆதாரங்களை மிக எளிதாக கைப்பற்றி வெளியிடுகின்றன என்றும், இதற்கு அந்நாட்டு இளைஞர்களுக்கு கொடுக்கும் கூலி சில டாலர்களே என்றும் தகவல் தொழிற்நுட்பத்தில் கைதேர்ந்த நம்மவர்கள் சொல்கிறார்கள்.

ஊருக்கு ஊர் கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் இருந்தே குற்றங்களை குறைக்க முடியவில்லை என்கிற அவல நிலையில், தகவல் தொழில் நுட்ப குற்றங்களை கண்டுபிடிக்கும் காவலர்கள் மாவட்ட அளவில் மட்டுமே இயங்கி வருகின்ற போது, எப்படி தகவல் தொழில் நுட்ப குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்?

உள்ளூரில் நடப்பதே இப்படியென்றால், வெளி மாநிலத்தில் இருந்தும் நாடுகளில் இருந்தும் செய்யப்படும் குற்றங்களை எப்படி கண்டு பிடிப்பார்கள், கட்டுப்படுத்துவார்கள்? ஆனால், முக்கிய நபர்களுக்கு ஏதாவது என்றால் மட்டும், கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

நம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இத்தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நம்மை வெகுவாக சுரண்டுகின்றன என்பதையும், அதனை நம்மால் தடுக்க முடிவதில்லை என்பதையும், அவர்கள் அனுமதிக்கும் அளவை விட குறுஞ்செய்திகளை அனுப்ப முடிவதில்லை என்பதையும், முறையற்ற வகையில் பேசுபவரை எங்கிருந்து பேசுகிறார் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.

தகவல் தொழில் நுட்பம் என்கிற சூழ்நிலை சூழ்ச்சி வலையில் சிக்கி வெவ்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்தி வரும் நாம் ஒவ்வொருவரும், மீண்டும் ஒரு நாகரீக அடிமை வாழ்வில் அடியெடுத்து வைத்து, அதாள பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து, மீண்டு(ம்) வெளி வருவோமா?

தகவல் தொழிற்நுட்பத்தை ஒவ்வொருவரும் தமது வசதிக்கும், நோக்கத்திற்கும் தக்கபடி, தனித்தனியாக உருவாக்கி கொள்ள முடியும் என்பதோடு, அது மற்றவர்களுக்கு புரியாத வண்ணம் மிகச்சிறப்பான முறையில் கையாள முடியும் என்பதுதான்.

இப்படித்தான், ஓசூர் டி.வி.எஸ் நிர்வாகம், தன்னிடம் இருந்த தகவல் தொழிற்நுட்ப யுக்தியை முறைகேடாக பயன்படுத்தி, தொழிலாளி முறைகேடு செய்தார் என குற்றம்சாற்றி சர்வ சாதாரணமாக, சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்தது.

நிர்வாகத்துக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நிர்வாகத்தின் சட்ட விரோதமான தகவல் தொழிற்நுட்பத்தை (வருகையை பதிவு செய்யும் மின்னணுப் பதிவை) கண்டும் காணாமல் இருந்த அரசு ஊழியர்களின் கழுத்தில் சட்டம் என்ற கத்தியை சாட்சியாக வைக்கவே, அவ்வூழியர்களோ நிர்வாகத்தின் கழுத்தில் தனது சட்ட அதிகார கத்தியை வைத்தார்கள். விளைவு?

வேறு வழியில்லாமல் டி.வி.எஸ் நிர்வாகம் தொழிலாளியின் வீடு தேடிச் சென்று சுமார் ஏழு லட்ச ரூபாய்களை இழப்பீடாக வழங்கியது.

இதெல்லாம், கோடான கோடிக்கு அதிபதியான நிர்வாகத்தை எதிர்த்து, மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஓசூரில் இயங்கும் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில், நமது பாணியில் மனு செய்த தொழிற்தகராறு வழக்கு எண் 251 / 2005 இல் சுமார் ஒன்றரை வருடத்திற்குள் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டிய இமாலய சாதனை.

இந்நிலையில், நம்நாட்டில் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமானதாகவோ, மக்களாட்சிக்கு உகந்ததாகவோ தெரியவில்லை. ஏனெனில், தேர்தல் தலைமை பொறுப்பு பணி உட்பட மற்ற பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எவருமே தகவல் தொழிற் நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க இயலாது.

அப்படியே பயிற்சி பெற்றிருந்தாலும் கூட, அழிக்க முடியாத, அழித்தால் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய, ஆவணங்களிலேயே அரசு ஊழியர்கள் தங்களின் ஆசாபாசங்களுக்காக எதையும் செய்யத் துணியும் போது, பெரும்பாலான மக்களுக்கு புரியாத புதிராக இருக்கிற தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?

எந்த ஆட்சி தனது ஆசாபாசங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு சாதகமாகத் தானே அரசு ஊழியர்கள் செயல்படுவார்கள், அதற்கு தக்கவாறுதானே தகவல் தொழிற்நுட்பத்தை மாற்றி அமைப்பார்கள்?

எவ்வித கட்டுப்பாடும் இன்றி குடிமகன் ஒருவர் சுயமாக செலுத்தக்கூடிய வாக்குரிமை பறிபோய், தற்போது அரசு அலுவலரின் சமிக்சைக்காக காத்து நிற்க வேண்டிய அவலம் மின்னணுவில் இருக்கிறது. வாக்குபதிவை விரைவாக கணக்கிட்டு வெற்றியை வெளிப்படுத்துவதில் கள்ளத்தனத்தை காண முடிகிறது. முடிவுகள் சிதம்பர ரகசியமாக உள்ளது.

முன்பு 49 வில் தாம் ஓட்டு போட்டோம் என்பதற்கு உத்திரவாதம் இருந்தது. ஆனா, இப்போ அது கூட உத்திரவாதம் இல்லை. 49 ஒட்டு போட, ஒரு தில்லும் வேண்டியிருந்தது. ஏன்னா தில் இல்லாதவங்க, இதுல ஓட்டுபோட மாட்டாங்கவாக்குப்பதிவு யந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என ஒருவர் நிருபித்து இருக்கிறார், பாருங்கள்.

தனது தன்னிகரற்ற தகவல் தொழிற்நுட்ப திறமையால் உலகையே உளவு பார்க்கும் அமெரிக்கா, இன்றளவும் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு, வாக்குச் சீட்டையே பயன்படுத்தி வருவது, தகவல் தொழில் நுட்பத்தில் எதையும் செய்ய முடியும் என்பதற்கான வெட்ட வெளிச்சம்.

மொத்தத்தில் எல்லா கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் தவறுக்கு வழிவகுத்து வருகிறது, தகவல் தொழிற்நுட்பம். இந்தியாவில் இதுவரை அமைந்துள்ள ஆட்சிகள் எதுவுமே மக்களாட்சி இல்லை. இது குறித்து, மகத்தான மக்களாட்சி மலர…’ என்கிற தலைப்பில் விரைவில் படிக்க இருக்கிறீர்கள்!

மக்களாட்சி மலர மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்களில் ஒன்று, ‘வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும். வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையான49 வாக்குச் சீட்டிலேயே அச்சிடப்பட வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு நாட்டையாளும் வேலை யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய அதிக பட்சமாக ஐந்து நாட்கள் காத்திருப்பதில் எதுவும் குடிமுழுகி விடாது. வருபவர்கள் பிடிக்காவிட்டாலும் ஐந்து வருடமோ அல்லது அதற்கு மேலோ காத்திருக்கத்தானே வேண்டும்.

Posted onApril 2, 2014Categoriesதலையங்கம்Tags49 ஓட்டு1 Comment

பாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி!

ஆங்கில அரசாங்க முறை பரிதாபத்திற்குறியது. இது நாம் விரும்பத் தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவிற்கு என்றுமே வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

பாராளுமன்றத்துக்கெல்லாம் அன்னையான இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு மலடியைப் போன்றும், விபச்சாரியைப் போன்றும் இருக்கிறது. இது சற்றே கடுமையான கருத்தே; ஆனாலும், முற்றிலும் சரியானதே!

இந்த பாராளுமன்றம், தானாகவே ஒருநல்ல காரியத்தைக்கூட இதுவரை செய்ததில்லை. இதனாலேயே அதனை ஒருமலட்டுப் பெண்ணுக்கு ஒப்பிடுகிறேன். வெளியில் இருந்து வரும் வற்புறுத்தலினால் அல்லாது, அது ஒன்றுமே செய்ய முடியாது என்பதே அதன் இயற்கையான நிலைமையாக இருந்து வருகிறது.

அடிக்கடி மாறும் மந்திரிகளின் ஆதிக்கத்தின்கீழ் அது இருந்து வருவதால், அதுவொரு விபச்சாரியைப் போன்றது. இன்று அது ஒருவரின் கீழ் இருக்கும். நாளை வெறொருவரின் கீழ் இருக்கும்.

சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது. உறுப்பினர்கள் சம்பளமின்றி வேலை செய்கின்றனர்; ஆகையால், பொதுமக்களின் நன்மைக்காகவே சேவை செய்கிறார்கள் என்று கருதவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் படித்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள்; ஆகையால் தேர்ந்தெடுப்பதில் பொதுவாக தவறு செய்யமாட்டார்கள் என்றும் நாம் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய பாராளுமன்றத்தை தூண்டுவதற்கு விண்ணப்பங்களோ அல்லது வேறுவகை தூண்டுதல்களோ அவசியமேயில்லை. அதுசெய்யும் காரியங்களின் தன்மை நாளுக்குநாள் மிகத் தெரிவானதாய் இருக்கும் வகையில், அதன் வேலை எளிதாக இருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில், அதன் உறுப்பினர்கள் கபடமுள்ளவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் சங்கதி. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறு நலன்களிலேயே கருத்துடன் இருக்கின்றனர். பயமே அவர்களை நடத்திச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது.

முந்தைய நாள் உருவாக்கியதை, மறுநாள் வேறுவிதமாக அழித்து மாற்றியாகி விடும். அதன் வேலையில், இதுவே முடிவானது என்று ஒன்றை எடுத்துக்காட்டுவது முடியாதகாரியம்.

பெரிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும்போது, அதன் உறுப்பினர்கள் காலை நீட்டிக்கொண்டு தூங்கி விடுகின்றனர். சில சமயங்களில் கேட்பவர்கள் சலித்துப்போகும் அளவிற்கு, உறுப்பினர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். அறிஞரும், எழுத்தாளருமான கார்லைல் என்பவர், அதனை உலகத்தின் பேச்சுக்கடை என்கிறார்.

உறுப்பினர்கள் சிந்தித்துப் பாராமலேயே தங்கள் கட்சிக்கு சாதகமாக வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாட்டிற்கு இணங்கி அவர்கள் அப்படிச்செய்ய வேண்டியிருக்கிறது. எவரேனும் ஓர் உறுப்பினர் தப்பித்தவறி, சுயேச்சையாக வாக்கைச் செலுத்தி விட்டால், அவர் கட்சியை விட்டு பிரிந்தவராக கருதப்படுகிறார்.

பாராளுமன்றம் வீணாக்கி வரும் பணத்தையும், நேரத்தையும் சில நல்லவர்களிடம் ஒப்படைத்தால், அந்நாடு இன்னும் அதிக உயர்ந்த மதிப்பில் இருக்கும். அத்தேச மக்கள் அதிக செலவு செய்து நடத்தும் ஒரு பொம்மைக்கூத்தே பாராளுமன்றம்.

இதனை நான் மட்டும் சொல்லவில்லை; சில ஆங்கிலேய அறிஞர்களும் இதையே கூறியிருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர் எவரும் அதில் உறுப்பினராக இருக்க முடியாது என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கிறார். மற்றொருவர், அதுவொரு குழந்தை என்கிறார்.

எழுநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பாராளுமன்றம், இன்னும் குழந்தையாகவே இருக்கிறது என்றால், அது என்றுதாம் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறப்போகிறதோ?

பாராளுமன்றத்துக்கு உண்மையான முதலாளி கிடையாது. பிரதம மந்திரியின்கீழ் அதன் நடவடிக்கை நிலையானதன்று. அதனால், ஒரு விபச்சாரியைச் செய்வதுபோல், அதனை அலைகழிக்கின்றனர்.

பிரதம மந்திரிக்கோ பாராளுமன்றத்தின் நன்மையைவிட, தனது அதிகாரத்தில்தான் அதிக சிரத்தை. அவருடைய சக்தியெல்லாம், தம்முடைய கட்சிக்கு வெற்றியை தேடுவதிலேயே ஈடுபட்டிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு நியாயமானதையே செய்யவேண்டுமென என்பதில், அவருக்கு எப்பொழுதுமே அக்கறை கிடையாது.

தம் கட்சிக்கு அனுகூலமாகவே பாராளுமன்றம் காரியங்களை செய்யும்படி பிரதம மந்திரிகள் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவு. பிரதம மந்திரிகள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை. ஆனால், நான் பார்த்திருப்பவைகளில் இருந்து அவர்களை தேசத்தின் அபிமானிகள் என்று என்னால் எண்ணமுடியவில்லை.

அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்பதற்காக அவர்களை யோக்கியர்கள் என நினைத்தால், யோக்கியர்கள்தாம். ஆனால், வெளிவராத பல தூண்டுதல்களுக்கு இவர்கள் உடன்பட்டு விடுகிறார்கள்.

தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக, மக்களுக்கு கௌரவப் பட்டங்களை லஞ்சமாக கொடுக்கின்றனர். அவர்களிடம் உண்மையான நேர்மையோ, மனசாட்சியோ கிடையாது என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை.

வாக்காளர்களுக்கு அவர்களுடைய பத்திரிகைகளே வேதவாக்கு. அப்பத்திரிகைகளை கொண்டே அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. அப்பத்திரிகைகளோ எப்பொழுதுமே யோக்கியமானவை யன்று. ஒரே விசயத்தைப்பற்றி, பல பத்திரிகைகளும், அவை எந்த கட்சியின் சார்பாக நடத்தப் படுகின்றனவோ அதற்கு ஏற்றப்படி, வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றன.

ஒருவரை குறித்து ஒரு பத்திரிகை, யோக்கிய பொறுப்புக்கு உதாரணப்புருஷர் என்று கூறும். மற்ற பத்திரிகைகளோ, அவரை அயோக்கியர் என்று சொல்லும்.

இந்த வகைப் பத்திரிகைகளைப் படிக்கும் மக்கள் அடிக்கடியும், அதிகபட்சம் ஏழாண்டுகளுக்குள்ளும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். இக்கருத்துக்கள் கடிகாரத்தின் பெண்டுலம் போல அப்பக்கமும், இப்பக்கமுமாக ஊசலாடிக் கொண்டேயிருப்பதால், ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை.

நல்ல பேச்சாளர்கள் அல்லது தங்களுக்கு விருந்துகள், வரவேற்புகள் அளிப்பவர்களின் பின்னாலேயே அம்மக்கள் போய்க்கொண்டிருப்பார்கள். அம்மக்கள் எவ்வாறோ, அவ்வாறே அவர்களது பாராளுமன்றமும். ஆனால், அவர்களிடம் பலமாக ஊன்றிப்போன ஒருகுணம் மாத்திரம் நிச்சயமாக இருந்து வருகிறது.

தங்கள் நாடு அழிந்து போவதற்கு இடந்தரவே மாட்டார்கள். எவரேனும் கெட்டஎண்ணத்துடன் தங்கள் நாட்டை நோக்கி விட்டால், அவர்களுடைய கண்களைப் பிடுங்கி விடுவார்கள். இதனால், அம்மக்களிடம் எல்லா உயர்குணங்களும் இருக்கின்றன என்றோ, அவர்களைப் பின்பற்றி நடக்கவேண்டுமென்றோ ஆகிவிடாது.

இந்தியா, இங்கிலாந்தைப்போல நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், இந்தியா அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

1909 ஆம் ஆண்டில், தனது நாற்பதாவது வயதில் மகாத்மாகாந்தி எழுதிய முதல் மற்றும் தத்துவ நூலான இந்தியதன்னாட்சியில், ‘இங்கிலாந்தின் நிலைமை என்கிற ஐந்தாம்பகுதியில் இருந்து, கருத்து மாறாமல் தேவைக்கேற்பசுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்டஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா

இதிலிருந்து நாம் தெரிந்து கொ(ள்ள, ல்ல)வேண்டியது

சுமார் 105 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்ன இக்கருத்தில் தவறு ஏதுவுமில்லாமல் அப்படியே அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிதாம் மாறியுள்ளதே தவிர, அவ்வாட்சியில் இருந்தது போன்ற கட்சி ஆட்சிகள் மற்றும் காட்சிகள் எதுவுமே மாறவில்லை!

இந்தியா அழிவில் சென்று கொண்டிருக்கிறதே தவிர, நல்லரசாகவில்லை. எங்கே வல்லரசாவது?

மகாத்மா காந்தியின் கொள்கையால் நாடு நாசமாகவில்லை. அவரது கொள்கையை கடைப் பிடிக்காததால்தாம் நாசமாகிக்கொண்டு இருக்கிறது

இப்படி காந்தி சொன்ன எதையுமே கடைப்பிடிக்காத நம்தேசம் எப்படி காந்தி தேசமாகும்; வேஷமேயாகும்!

உண்மையான காந்தியாவாதி யாராவது இருந்தால்தேர்தலில் போட்டியிடுவார்களா?

இதற்கு மாற்றுத்தீர்வு என்ன

இதையெல்லாம் எந்த நாளேடாவது, ஊடகமாவது செய்தியாக வெளியிட முன்வருமா?

இதன் அசல் ஆங்கில ஆக்கத்தை இங்கு சொடுக்கினால் படிக்கலாம்.

 நம்மையெல்லாம் எப்படி அறிவாளிகள் என்று சொல்வது? முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்!

Posted onApril 1, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsநல்லரசாகவில்லை. எங்கே வல்லரசாவதுபத்திரிகை குறித்து மகாத்மா காந்தி!,பாராளுமன்றம்Leave a comment

பொய்யனின் பீஸ்!

இன்றைய காலகட்டத்தில் திருவள்ளுவர் இருந்தால், பொய்யனின் வல்லுறவு என்கிற அதிகாரத்தில் இப்படியொரு குறளைத்தாம் முதலாவதாக எழுதியிருப்பார்.

நீதிமன்றத்தில் பொய்பேசும் பொய்யன் அநீதிகூலியாக 
ஆத்தாளை வல்லுறவுக்கு கேட்பான்.

விளக்கம்: நீதிமன்றத்தில் பரிந்துபேசும் பொய்யன், அதற்கு நிதியாக பெற்றெடுத்த தாயையே அநீதியாக வல்லுறவுக்கு கேட்பான்.

விவாகரத்து வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ளும் சகோதரிகள் பலர், பொய்யர்கள் எங்களிடம் பாலியல்ரீதியாகவே பேசுகின்றனர். பொய்யனியை அமர்த்திக் கொண்டாலும், அவர்கள் வேறொரு பொய்யருடன் கூட்டணியாக இருப்பதால், அவர்களுக்குள் உள்ள தகாத உறவுகளைப் போலவே, எங்களிடமும் பேசுகிறார்கள் என்று தானே வாதாட ஆலோசனை கேட்பார்கள்.

இவர்களின் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்தசெய்தி உங்களுக்கு தெளிவுபடுத்தும்.

விபச்சார தொழிலில் சிக்கிய நீதிபதிகளின் யோக்கியதையென்ன என்பதை இந்தசெய்தி உங்களுக்கு தெரியப்படுத்தும். இப்படி லட்சக்கணக்கான செய்திகள் இருக்கின்றன.

இவ்வளவு ஏன், தாத்தா வயதுடைய உச்சநீதிமன்ற நிதிபதி கங்கூலி, பேத்தி வயது இளம் பொய்யனியை பாலியல்ரீதியாக அனுபவத்திட விரும்பிய செய்தி உலகறிந்ததே!

எனவே நீதியைத்தேடிநூல்களைப்படித்த பொய்யர்கள் சிலர், தங்களின் விபச்சாரதொழிலை கைவிட்டு விட்டனர். ஒரிருவர் விரைவில் விட முயற்சித்து வருகின்றனர். மேல்நிலை நிதிபதிகளால் பாதிக்கப்பட்ட கீழ்நிலை நிதிபதிகள் சிலர் என்னுடைய சட்ட ஆலோசனையின்படி நியாயத்திற்காக அவர்களே வாதாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு பொய்யர் எனது சட்ட ஆராய்ச்சி கருத்துக்களை வெளியில் சொல்லக்கூடாது என பூச்சாண்டி காண்பித்து வருகிறார். என்மீது வழக்கு வருமாம். ஒருவரி கூட ஒழுங்காக எழுதத்தெரியாத இந்த விபச்சாரி, ஈனப்பிறவி எனக்காக வாதாடுவாராம். அதுக்கு பீஸா என்னகேட்கிறார் என்பதைதாம், அவரது நெற்றியில் எடுத்து ஒட்டிவைத்திருக்கிறேன். எனது பாணியில் அதற்கான நியாயக்குறளையும், விளக்கத்தையும் பக்கவாட்டில் எழுதியுள்ளேன். படித்துக் கொள்ளுங்கள்.

சரி, உங்களைப்பற்றி மகான்களின் கருத்துக்கள் இன்னும் நிறைய மக்களுக்கும், வழக்காளிகளுக்கும் தெரியவில்லை. ஆகையால் வழக்கு போடுங்கள். எல்லோர்க்கும் தெரியட்டும் என தார்மீக அனுமதி கொடுத்து வாழ்த்தியதும், நான் யாரென தெரிந்து பயந்துகழிந்து வழக்குபோட முடியாது என்று சொல்லிவிட்டார்.

இதனால், நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமன்று; சிறைக்குள் செல்வதும் சாதனைதாம்!’என்கிற எனது தத்துவத்திற்கு ஏற்ப, நான் புனித சிறைப்பயணம் போக வைத்திருந்த கனவு பொய்யத்துப் போய்விடவே, இப்பொய்யரை நண்பராக்கி கொள்ளமுடியால், வம்பராக்கி டுக்கா விட்டுவிட்டேன்.

நானும், நீதியைத்தேடிவாசகர்களும் அவங்கவங்க வழக்கை அவங்களேதாம் வாதாடுறாங்க. அதனால், எங்களுக்கு பொய்யர்கள் கேட்கும் இப்பீஸைப்பற்றி மட்டுமன்று; எப்பீஸைப்பற்றியும் கவலையில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் இப்பொய்யர்களை வைத்துதாம் வழக்கை நடத்து(றீ, றா)ங்க. இதுக்கு பீஸா (நீ, அவ)ங்க என்னகொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரியப்படுத்தி சகோதர, சகோதரிகளான உங்களை எச்சரிக்கவே இந்த கட்டுரை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்குறள் 314

என்று திருவள்ளுவர் அவர் காலத்தில் வாழ்ந்த வெட்கம் நிறைந்த மனிதர்களுக்காக அறவுரை கூறினார்.

ஆனால், இப்போது உள்ள மனிதர்கள் வெட்கத்தைபற்றி கவலைப்படுவதில்லை. அதிலும், காந்தி விபச்சாரிகள் என்றும், பெரியார் ஈனப்பிறவிகள் என்றும் சொன்ன பொய்யர்களிடம் வெட்கத்தை எதிர்பார்க்கவே முடியாது. எனவே, இந்த காலப்பொய்யர்களுக்கும் பொருந்துவது போல,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்யாரென
அடையாளங்காட்டி எச்சரித்து விடல்

என்பதற்கு ஏற்ப ஒருபொய்யரை அடையாளங்காட்டி விட்டேன். ஒருபாணை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல எல்லாபொய்யர்களுக்கும் இப்பொய்யரே அடையாளம்.

எனவே, சகோதர சகோதரிகளே பொய்யர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடமையை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் மானம், மரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

மகாத்மா காந்தியும், பெரியாரும் எதற்காக இப்பொய்யர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளான விபச்சாரிகள் மற்றும் ஈனப்பிறவிகள் என்று சொன்னார்கள் என்பதற்கான அர்த்தம் புரியாமலேயே இருந்தது.

இப்பொய்யர் என்னிடம் கேட்ட பீஸையும், மகாத்மாக்கள் இப்பொய்யர்களைப்பற்றி குறிப்பிட்ட கடுமையான வார்த்தைகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, இப்பொய்யர்களது ஆத்தா, அம்மா, அக்கா, தங்கச்சி, பொண்ணுங்க மேலவழக்கு வந்தபோதெல்லாம் இப்பொய்யர்கள்தானே வாதாடியிருப்பார்கள். அதுக்காக பீஸா அவங்ககூட பாலியல் உறவு கொண்டிருப்பார்கள் போலிருக்கு!

மகாத்மா காந்தி இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல வெட்கப்பட்டுகிட்டுதாம், மற்றதை எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டு இறுதியாக விபச்சாரிகள் என்றும், பகுத்தறிவு பெரியார் ஈனப்பிறவிகள் என்றும் சொல்லியிருக்காங்க போலிருக்கு!

என்னயிருந்தாலும், சொல்லவேண்டியதை சொல்லி, சொல்லக்கூடாததை குறிப்பால் உணர்த்துவதில் மகான்களுக்கு நிகர் மகான்கள்தாம். ஆனால், சட்ட ஆராய்ச்சியாளரான எனக்கே இப்போதுதாம் இப்பொய்யர்களுடைய பீஸ் என்னான்னு (தெ, பு)ரியவருகிறது என்னும்போது உங்களுக்கும், சாதாரண மக்களுக்கும் எப்படி புரிந்திருக்கும்?

அதுசரி பொய்யர்களே, உங்கமேல வழக்கு வந்தா, எங்களைப் போல நீங்களே வாதாட வக்கில்லாம, உங்களைப்போல வேறொரு விபச்சாரியை வைத்து வாதாடுகிறீர்களே, அதற்கு பீஸா ஆத்தாலையா, அம்மாவையா, அக்காவையா, தங்கச்சியவா, பொண்டாட்டியவா, பொண்ணையாயார அனுப்புவீங்க, ஒருத்தரையா இல்ல, ஒட்டுமொத்தமா எல்லோரையுமா என்பது மட்டுமே எனக்கு தெரிய வேண்டியிருக்கிறது.

ஆகையால், எந்தெந்த வழக்குக்கு எத்தனைமுறை, என்னனென்ன முறை, எவ்வளவு நேரம், வேறு என்னென்ன பண்ணனும், எல்லோருக்கும் ஒரேமாதிரிதானா அல்லது வேறு விதமா என மகான்கள் குறிப்பால் உணர்த்தியுள்ள ரகசியங்களை எல்லாம் தெளிவாகச் சொன்னால், அடுத்தடுத்த நூல்களில் அப்டேட் செய்ய வசதியாயிருக்கும்.

இதனை பொய்யர்கள்தாம் சொல்லவேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யார்வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் விரும்பினாலேயொழிய உங்களின் ரகசியம் காக்கப்படும் என்பது உறுதி.

என்னடா இப்படி பச்சையா, கொச்சையா கேட்கிறேனே என நினைக்காதிங்கஆராய்ச்சி என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஆராய்ந்து சொல்லத்தான் வேண்டும்.

ஆமாம், எதையும் மறைத்து சொல்வதற்கு நான் மகானன்று. மக்களில் ஒருவனே; சாதாரண சட்ட ஆராய்ச்சியாளனே; ஆராய்ச்சியில் கிடைத்ததை ஒளிவு மறைவின்றி தைரியமாக பதிவு செய்யும் எழுத்தாளனே, கடமையாளனே! அவ்ளோதான்!!

Posted onMarch 10, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsஅக்காவையா,அம்மாவையாஅவங்களேதாம் வாதாடுறாங்கஆத்தாலையாஆத்தாளை,இன்னா செய்தாரை ஒறுத்தல்எழுத்தாளனேகடமையாளனேசகோதர சகோதரிகளேடுக்காதங்கச்சியவாதாயைநீதியைத்தேடி... வாசகர்களும்,பாலியல்ரீதியாகபொண்டாட்டியவாபொண்ணையாவக்கீல் பீஸ்,வல்லுறவுக்குவாதாடி பிணையில்விவாகரத்து வழக்குLeave a comment

சாதா சிவம்!?

தமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக கூட ஆகலாம்.!!!???

ஆம், சதாசிவம் என்கிற தமிழ் வழிக்கல்வியில் படித்த தமிழர், குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் பெற்ற இந்தியாவின் தலைமை நிதிபதியாகிட்டார் என்று, வெற்று தற்பெருமை பேசுவதில் தமிழர்களுக்கு நிகர் உலகில் வேறு யாருமில்லை என்கிற வகையில் தற்பெருமை கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அவ்வப்போது உலா வந்து சற்றே ஓய்ந்திருக்கின்றன.

முதலில் இதனை சரி என்றும், பின் சதாசிவம் தமிழரில் இரண்டாவது தலைமை நிதிபதியே அன்றி முதல் தலைமை நிதிபதியன்று. தமிழரில் முதல் தலைமை நீதிபதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக 07-11-1951 முதல் 03-01-1954 வரை பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி அவர்களே எனவும் சில ஊடகங்கள் மட்டும், ஆதரித்த செய்தியிலேயே மறுப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.

இதுதான் உண்மையும் கூட என்பதை உச்சநீதிமன்றத்தின் இணையதள தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதனை தலைமை நிதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிதிபதி சதாசிவம், தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருந்தும், இதுவரையிலும் தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை.

இந்நிலையில், ஒரு தமிழர் இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக பதவி வகித்திருக்கிறார் என்பது கூட தெரியாத தமிழர்களாக சுமார் அறுபது ஆண்டு காலம், அறிவு வறுமையில் இருந்திருக்கிறோமே என வெட்கப்பட வேண்டியதற்கு பதிலாக, வெற்று தற்பெருமை எதற்கு?

மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒருகருவியே! தாய்மொழி கண்போன்றது என்றால், பிறமொழி இமைபோன்றது. இதில் வெற்று தற்பெருமையும், வெறித்தனமும் எதற்கு?

நம் தமிழரான சதாசிவம் இந்தியாவின் நாற்பதாவது தலைமை நிதிபதி. அப்படியானால், இவருக்கு முன்பாகவும், பதஞ்சலி சாஸ்திரிக்கு முன்பாகவும் தலைமை நிதிபதியாக இருந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் தாய் மொழியில் படிக்காமல், நம் தமிழில் படித்தா தலைமை நிதிபதியானார்கள்?

நிதிபதி சதாசிவத்திற்கு ஆங்கில அறிவு இல்லாமலா தலைமை நிதிபதியாகி விட்டார். ஆங்கில அறிவு இல்லையென்றால் தாலுக்கா நிதிபதியாக கூட முடியாது என்று தெரியாத வடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்?

நிதிபதி சதாசிவத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தானாகவே போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டாரா?

சதாசிவத்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் நீடித்தால், 26 ஏப்ரலில் 2014 இல் ஓய்வு பெற போகிற சதாசிவம், எந்தவொரு குடியரசுத் தலைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வாய்ப்பை பெறப் போவதில்லையே!

அட இவ்வளவு ஏன்,

இவர் எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் பதவி வகிக்காததால், எந்தவொரு மாநில ஆளுநருக்கும் கூட, பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லியே?

உண்மைகள் இப்படி அக்குவேறு, ஆணிவேறாக இருக்க நமக்கெதற்கு விதவிதமான விதண்டாவாத வெற்று தற்பெருமைகளும், பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களும்?

சதாசிவம் தலைமை நிதிபதியானதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் எனது ஆராய்ச்சியில் சிறுமைப்படவே நிறைய இருக்கிறது.

சதாசிவம் தலைமை நிதிபதியாக பதவியேற்றபோது, இவரைவிட உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவராக இருந்தவர் ஜி.எஸ்.சிங்வி என்பவரே.

இவர் ராஜஸ்தான் கிளை, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக 20-10-1990 முதல் 26-11-2005 வரை பணியாற்றி பின், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாக 27-11-2005 தேதி நியமிக்கப்படுகிறார்.

ஆனால், சதாசிவம் 08-01-1996 அன்றே சென்னை உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். பின் 20-04-2007 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதன்பின் உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி பதவிக்கு நியமிக்கப்படாமலே நேரடியாக 21-08-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டவர், அடுத்ததாக உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்க தகுதியானவர் என்கிற முறையிலும், வயதிலும், அனுபவத்திலும் சதாசிவத்தை விட சிங்வியே முத்தவர்.

அப்படியானால், மூத்த சிங்வியை, சதாசிவம் தலைமை நிதிபதியாக முந்த காரணமே, சிங்வி 12-11-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக படிப்படியாக தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு 12-12-2013 அன்று ஓய்வு பெறுகிறார்.

ஆனால், சதாசிவமோ எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் நியமிக்கப்படாமலே, நேரடியாக உச்சநீதிமன்ற நிதிபதியாக 21-08-2007 அன்று நியமிக்கப்படுகிறார். இந்த மூப்பு அடிப்படையிலேயே தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 26-04-2014 அன்று ஓய்வு பெறுகிறார்.

எது எப்படியோ, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ சத்தியப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றிராத இந்தியாவின் ஒரே தலைமை நிதிபதி, நம்ம சதாசிவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் நினைப்பது போன்று அவர் எவ்விதத்திலும் சாதனை சிவமன்று; சாதா சிவமே!

Posted onMarch 8, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsஆங்கில அறிவு இல்லாமலாஇந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதிசதாசிவம்,தமிழில் படித்தால் தலைமை நிதிபதியாகவடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்?Leave a comment

நிதிபதி கேனச்சந்துரு

திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால், நீதிமன்றம் என்ற அதிகாரத்தில், தரந்தாழ்ந்து விட்ட தமிழர் நிதிபதிகளுக்காக இப்படித்தாம் முதல்குறளை எழுதியிருப்பார்.

தன்னை நீதியரசர் எனசொல்ல வேண்டாமென்பார்

தன்னையுணர்ந்த நிதியரசர் சந்துரு

நிதிபதி சந்துரு நீதிக்கே உதாரண புருஷர் என நாளேடுகளும், ஆர்வலர்களும் நம்பிக்கை கொண்டிருந்த அவரது ஊழியக் (கா, )லத்திலேயே, அவரொரு பசுந்தோல் போர்த்திய புளி என்பதை ஆராய்ந்து திரித்து எழுதப்படும் தீர்ப்புகள் என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அதனை அவரது இல்ல முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்பி விளக்கம் கேட்டோம். ஆனால், அதற்கு அவரால் இதுவரை பதில்தர முடியவில்லை.

இதனை இவ்வினைய இணைப்பில் காணலாம்

நம் குட்டு வெளிவந்து விட்டதே தெரிந்து விட்ட இக்கேனச்சந்துரு நேரடியாக பதில் அளிக்க முயலாமல், ஊடகங்களின் உதவியோடு, இவ்விசயத்தில் உண்மையை ஒளித்து மறைத்து எப்படி எழுதுகிறார் என்பதை படிக்க இங்கு சொடுக்கவும்

இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்த தீர்ப்பை நாந்தான் எழுதினேன் என சொல்லமுடியாமல் நீதிமன்றம் தீர்ப்பை எழுதியதாக குறிப்பிடுவது அய்யோக்கியத்தனம்

இவரென்னமோ யோக்கியமா தீர்ப்பெழுதினது போலவும், திரு. சகாயம் என்னமோ அற்பத்தனமா அரசுக்கு கடிதம் எழுதியது போலவும் சொல்லுவது …………. ………….. …………… …………… ………….. என உங்க வாயிக்கு வந்தபடி வார்த்தைகளை போட்டு படிச்சிக்குங்க!

அந்த கட்டுரையில் மதுரையைச் சேர்ந்த பொய்யர் நிர்மலா ரானி என்பவரை நீதிபதியாக பரிந்துரை செய்வதற்காக, அவர் முன்னிலையாகும் வழக்குகளில் இப்படி தீர்ப்பை திரித்து எழுதுவதாக புலன் விசாரணையில் கிடைத்த தகவலை பதிவு செய்துள்ளோம்.

அது உண்மை என்பதற்கான ஆதாரம் இதோ… இதனை 27-02-2013 அன்று எழுதினோம் என்பதை கடிதத்தில் அறிவீர்கள். நான் சொன்னது உண்மை என்பதை பத்து மாதத்திற்கு பிறகு கீழ்கண்ட நிதிபதிகள் தேர்வு பட்டியல் நிரூபித்திருக்கிறது.

இதற்கு பிறகும் நீங்கள் அவருக்கு துதிபாடினால், இனம் இனத்தோடுதாம் சேரும் என்பது பொய்யாகி மகாத்மா காந்தி சொன்ன விபச்சாரிகளோடும், பெரியார் சொன்ன ஈனப்பிறவிகளோடும் கூட சேரும்  என்கிற கதையாகிவிடும்.

Posted onFebruary 22, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsசந்துருநிர்மலா ராணிநீதிபதிகள் தேர்வுபொய்யர்மதுரை உயர்நீதிமன்றம்Leave a comment







பொதுவுடைமை கோட்பாடு

எனக்கு அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களில் உங்களது கருத்துக்களை, எங்களுடைய இதழிலோ, வலைப்பக்கத்திலோ அல்லது வேறு வகையிலோ நாங்கள் பதிவிடலாமா என்று அனுமதி கேட்பதை பெரும்பான்மையினர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

இந்த வகையில் நேற்றுவந்த மடலிது

ஒவ்வொரு முறையும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லியே அலுத்துப்போய் விட்டது. இனி யார் அப்படி கேட்டு மின்னஞ்சல் செய்தாலும், அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிப்பது என்கிற நோக்கிலேயே இப்பதிவு.

முதலில் நானொரு சட்ட ஆராய்ச்சியாளன். சட்டத்தின் பலனை மக்களுக்கு விழிப்பறிவுணர்வாக ஊட்டுபவன்.

சட்டம் என்பது சமுதாயத்தின் பொதுச்சொத்தேயன்றி, என்பாட்டன் சொத்தன்று. எவரது பாட்டன்சொத்தும் அன்று என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். ஆதலால், நான் சட்டந்தொடர்பாக எதை எழுதினாலும் அது பொதுவுடைமையேயன்றி, எனது தனியுரிமை கிடையாது.

இதனை 2004 ஆம் ஆண்டு எழுதிய முதல் நூலிலும், அதன் பிறகு எழுதப்பட்ட ஒவ்வொரு நூலிலும், இதழிலும் தெளிவுபடுத்தி உள்ளேன். ஆனால், பத்து வருடங்களை கடந்து விட்டப்பின்னும்கூட, தேவையேயில்லாமல் அனுமதி கேட்டே அலுப்படையச் செய்து விட்டீர்கள்.

எனவே, நேற்று அனுப்பிய கடிதமே இறுதியாக இருக்கட்டும்.

சட்டத்திற்கே, சட்டத்திற்கு புறம்பாக தனியுரிமை கொண்டாடி, பொய்யர்கள் புகுத்திவிட்ட, இதுபோன்ற வெற்றுச்சடங்கு அனுமதி சம்பிரதாயங்களில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்.

இன்றைய உலகமய-மாக்கள், தாராளமய-மாக்கள், தனியார்மய-மாக்களால்மக்களுக்கு பொதுவுடைமை கோட்பாடு என்றால் என்னவென்பதே மறந்து விட்டதுபோல தெரிகிறது.

மேலும், சட்டம் மாத்திரமல்லாமல் நான் எழுதும் எல்லா கருத்துக்களும் பொதுவுடைமையே என்பதால், எந்த கேள்வியும் இல்லாமல் விரும்பிய வகையில் பரப்பலாம். இப்படி சிலர் செய்து கொண்டுதாம் இருக்கின்றனர்.

உதாரணத்திற்கு மதுரையில் இருந்து வெளிவரும் தெலுங்கர் கீதம் மற்றும் உயிரோசை மாத இதழ்களைச் சொல்லலாம். இதுபோலவே, அக்கு ஹீலர் உமர் பரூக் உள்ளிட்ட அன்பர்கள், நான் எழுதிய மக்களை மதிமயக்கும் ரத்ததானம் என்கிற கட்டுரையை, துண்டறிகையாக வெளியிட்டே பரப்பி வருகிறார்கள்.

நேற்று வெளியிட்ட வாகன (ஓட்டி, பயணி)களேஉஷார்!கட்டுரையை கூட, அல்லா பகேஷ் என்கிற அன்பர் இருமாதங்களுக்குமுன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே எழுதி வெளியிட்டேன். வசதிவாய்ப்பு உள்ளவர்கள் இதைகூட துண்டறிக்கையாக வெளியிட்டு, வாகன ஓட்டிகளிடமும், போக்குவரத்து காவலர்களிடம் வினியோகித்து தவறுகளை குறைக்கலாமே!

வசதி இருந்தால், எனது நூல்களை நீங்கள் விரும்பும் வெளியீட்டாளர் பெயரில் வெளியிட்டும் விற்றுக் கொள்ளுங்கள். இதனால், எனக்கோ அல்லது வேறுயாருக்கோ கூட ஐந்து பைசாகூட பங்கு தரவேண்டாம். ஆனால், இதற்காக நிதிப்பங்களிப்பு இல்லாத மற்ற பங்களிப்பை செய்துதரவும் தயாராய் இருக்கிறேன்.

ஆனால், எக்காரணம் கொண்டும் கருத்துக்களை கூட்டியும், குறைத்தும் அல்லது வேறு எதுசெய்தும் வெளியிட அனுமதியில்லை. இப்படிச் செய்யவும், பங்குதொகை தரவும் ஓரிரு பதிப்பகங்கள் முன்வந்தன. ஆனால், கருத்தே முக்கியம் என்பதால் மறுத்து விட்டேன்.

எனவே, சட்டம் மற்றும் சமூக நலன் சார்ந்து விழிப்பறிவுணர்வை ஊட்டி, பொதுவுடைமை கோட்பாட்டை நிலைநிறுத்த ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

குறிப்பு: நீங்கள் வெளியிடும் பதிவு, எப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை, வாசகர்களின் வசதிக்காக மறக்காமல் குறிப்பிடுங்கள். இப்படிப்பட்ட பகிர்தலுக்கு அடியில் வழக்கம்போல், நன்றி வாரண்ட் பாலா என்று குறிப்பிடுவதை கட்டாயம் தவிருங்கள்.

Posted onFebruary 1, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsபாட்டன்சொத்து,பொதுச்சொத்தேபொதுவுடைமை கோட்பாடுLeave a comment

சுதந்திரத்தின் சூத்திரம்

நாட்டில் நடக்கும் அனைத்து செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலேயே சட்டம் வரையறை செய்யப்படுகிறது. அதாவது, இச்சட்ட வரையறையின் முக்கிய குறிக்கோள் தனி மனித சுதந்திரம். இதன் மூலமாக ஒட்டுமொத்த சுதந்திரம்.

ஆனாலும், ஒருவருக்கு இவ்வளவுதான் சுதந்திரம் என யாரும், யாருக்கும் குறிப்பிட்டு வரையறை செய்ய முடியாது என்றாலும், ‘உங்களின் சுதந்திரம், மற்றவர்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருக்க கூடாதுஎன்று அதிகபட்ச வரையறையை வகுக்க முடியும்.

இதனை மீறும் பொழுது ஏற்படும் தன்மையைப் பொறுத்து, இவைகள் குற்றம் மற்றும் பிரச்சினை என இரு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன்பின் அவைகள் பற்பல உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

இரத்தினச் சுருக்கமாக சொல்லப்போனால், ‘நமது சுதந்திரம் மற்றவர்களின் சுதந்திரத்தை பறிக்காத வரையே சுதந்திரம். பறித்து விட்டால் குற்றம் எனவும், நமக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கு இல்லை என எப்போது எண்ணுகிறோமோ, அவ்விடமே பிரச்சினையின் ஆரம்பம்என்றும் சொல்லுவேன்.

எனவே, சுதந்திரம் என்பது ஒரு நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் கிடைத்த ஒரு தனிப்பட்ட அசைக்க முடியாத மாபெறும் அங்கீகாரம். இப்படிப்பட்ட மாபெறும் அங்கீகார சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி, சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரமாக இருந்து கொண்டாடுவதுதான்.

ஆனால், நாட்டில் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்களின் கூத்துகள் என்ன?

சுதந்திர தின விழாவிற்கு சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பே நாடு முழுமைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுகின்றன

சுதந்திர தினத்தை பாதுகாப்பாக கொண்டாடி முடிப்பது எப்படி என்பதற்கு ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு ஒத்திகை அணி வகுப்புகள் நடத்திப் பார்ப்பது

சுதந்திரத்தை கொண்டாடும் நாட்டின் தலைவர்கள் ஆற்றும் சுதந்திர தின விழாப் பேருரைக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு

சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி வளைத்து, வானில் இருந்து கண்காணிக்க சிறப்பு வானவூர்தி ஏற்பாடுகள். மற்ற வானூர்திகளுக்கு தடை

அந்தப்படை, இந்தப்படை, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புகள்.

இவைகள் எல்லாம் வெளியில் தெரியும் பாதுகாப்பு ஏற்பாடுகளே! இவைகள் இல்லாமல் உள்ளுக்குள் இன்னும் எத்தனையே பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்!?

ஒவ்வொரு வருட சுதந்திர விழாவைவும், குடியரசு விழாவையும் கூட, இப்படி கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லாமல் பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடத்தான் வேண்டுமா?

இப்படி கொண்டாடுவது வெட்கக் கேடான செயல் அல்லவா?

இதற்காகவா நம் முன்னோர்கள் பல்லாண்டுகள் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள்?

இப்படி கொண்டாடுவது உண்மையிலேயே சுதந்திர தின கொண்டாட்டம்தானா என்ற கேள்வி நாட்டின் மீது அக்கறை உள்ள நம்மைப் போன்ற ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் எழும் நியாயமான கேள்வியே என்றாலும், இதனை யாரிடம் போய் கேட்பது?

அப்படிக் கேட்டால் நாட்டின் முதல் துரோகி என முத்திரைக் குத்தி விடுவார்களோ என்ற (சு)தந்திர அச்சம் வேறு!

ஆட்சி செய்பவர்களுக்குதான் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றால், நீதிபதிகளுக்கும் ஒன்றும் குறைச்சல் இல்லை.

நீதியைச் சொல்பவர்களுக்கு கூட, ஏகே 47 பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால், ‘‘அடிப்படையிலேயே நீதிபதிகள் ஒழுக்கம் கெட்டுக் கிடக்கிறார்கள், உயிர்ப்பு தன்மையில்லாத கூ முட்டையைப் போல நாறி நாற்றமெடுத்து கிடக்கிறார்கள்’’ என்றுதானே அர்த்தம்?

இந்த லட்சணத்தில், ‘‘தங்களுக்கு தாங்களே மாண்புமிகு நீதியரசர்கள்’’ என்று தாங்கள் வழங்கும் தீர்ப்புரைகளில் கொஞ்சம் கூட, மானம், வெட்கம், சூடு, சொரனை இல்லாமல் போட்டுக் கொள்கிறார்கள்.

இவைகள் சிறிதாவது இருந்திருந்தால், மகான்களே குறிப்பிடும் விபச்சார வேலைக்கும், ஈனத் தொழிலுக்கும் வந்திருப்பார்களா அல்லது மானம், வெட்கம், சூடு, சொரனை இருக்கிறது என்று இப்போதாவது நிரூபித்து காட்டுவார்களா?

மொத்தத்தில், சுதந்திர தின விழாவை கொடியேற்றி கொண்டாடும் தகுதியுள்ளவர்கள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் எவரிடமும் முதலில் சுதந்திரமில்லை. ஆதலால், உண்மையில் அவர்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற மட்டுமல்ல, தொட கூட தகுதியில்லை.

சுதந்திரம் இல்லாத ஒருவர் அந்த சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு என்ன அடிப்படை தகுதியிருக்கிறது? கொண்டாட்டம் என்கிற பெயரில் நமது வரிப்பணத்தில் பல கோடிகள் செலவு செய்து கூத்தடிப்பதில் யாருக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை பட்டியல் போட முடியுமா?

எல்லாம் சம்பிரதாயத்திற்காக நடக்கிறதே ஒழிய, மற்றபடி யாருடைய சந்தோசத்திற்காகவும் அல்லவே அல்ல என்பதை விட, நல்லபடியாக கொண்டாடி முடிப்போமா? என்ற அச்சமே மேலோங்கியிருக்கிறது. இதற்காகத்தாம் இவ்வளவு பாதுகாப்புகள், கெடுபிடிகள்.

உண்மையில், சுதந்திர தினத்தன்று வழக்கமாக இருக்கும் பாதுகாப்புகள், கெடுபிடிகள் கூட, குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்!

இச்சுதந்திர நாட்டில், சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாமல், போனதற்கு அடிப்படைக் காரணமே, அவர்களிடத்தில் உண்மை இல்லாததுதான். உண்மை இல்லாதவர்கள் பாதுகாப்பிலும், அச்சத்தின் உச்சத்திலும் தானே இருக்க வேண்டும்..?

எனவே, உண்மை ஒன்றே, உண்மையான சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். இதை விடச் சிறந்த பாதுகாப்பு உலகிலேயே வேறெதுவும் கிடையாது.

இந்த வகையில் பார்த்தால் ஒரு நாள் அல்ல; இரு நாட்கள் அல்ல; வருடத்தின் 365 நாட்களும் சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் நாட்டின் மன்னர்களாகிய நாமே!

சுதந்திரம் என்ற தமிழ் வார்த்தையில், (சு)தந்திரம் என்று இருபொருள் வார்த்தைகள் அடங்கி இருப்பது போல, ஆங்கிலத்தில் ‘‘இன்டிபென்டண்ட் மற்றும் ஃபீரிடம்’’ என்று இரண்டு பெயர்களும், அர்த்தங்களும் உண்டு.

இன்டிபென்டண்ட் என்றால், ‘‘யாரையும் சார்ந்திராமல், யாருடைய பாதுகாப்பிலும் இல்லாமல் சுயமாக தன்னை மட்டுமே நம்பியிருப்பதாகும்’’.

இதுவே தமிழில், ‘‘சுதந்திரம்’’

ஃபீரிடம் என்றால், நான் முன்னரே சொன்னது போல‘‘எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மிகவும் சுதந்திரமாக இருக்கும் அதே சமயம், உங்களின் ஒட்டு மொத்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறித்து விடாமல் பார்த்துக் கொள்வதாகும்’’.

இதுவே தமிழில், ‘‘தந்திரம்’’

எனவே, நாம் யாராக இருந்தாலும், எப்பொருப்பில் இருந்தாலும் இந்த இரண்டு சுதந்திரத்துக்கான பொருளையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களே, உண்மையான சுதந்திரத்தை உண்மையாகவே கொண்டாட முடியும். அப்படி இல்லாதவர்கள் கொண்டாடும் சுதந்திரம், இல்லாத சுதந்திரத்தை, இருப்பது போல கொண்டாடும் தந்திரமே ஆகும்.

எதிர் காலங்களில், இவ்விரண்டில் நாம் கொண்டாடப் போகிறோம் என்பது சுதந்திரத்தை கொண்டாட நினைப்பவர்களின் உண்மையிலும், கடமையிலும்தாம் இருக்கிறது.

அனைவருக்கும் குடியரசு, கொடியரசு, கொடிய அரசு தின நல்வாழ்த்துக்கள்.

வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின் தலையங்கப் பகுதியில் இருந்து

Posted onJanuary 26, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsகுடியரசுகுடியரசு தினம்சுதந்திர தினம்சுதந்திரம்மகாத்மாLeave a comment

குற்றவாளியாகும் குடிமக்களே..!

மத்திய அரசு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கியதை எதிர்த்து, முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதார் அட்டையை எது ஒன்றுக்கும் கட்டாயமாக்க கேட்க கூடாது என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.

ஆனாலும், எரிவாயு உருளையைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயம் எனவும் இல்லையென்றால், எரிவாயு உருளை வழங்க இயலாது என்று எரிவாயு நிறுவனங்கள் நிர்பந்தப்படுத்துவதாக கூறி, ஒவ்வொருவரும் ஆதார் அட்டையைப் பெற முயற்சித்து வருகிறீர்கள்.

ஆதார் அட்டையைப் பெறுவதற்கு உங்களது பத்து விரல்களின் கைரேகைகளை பதிவு செய்து கொள்வதோடு, கண் விழிப்படலத்தையும்  எடுத்துக் கொள்வதாக ஆதார் அட்டையை பெற்றவர்கள் சொல்கிறார்கள்.  

குற்றவாளிகளை அடையாளம் கானும் சட்டம் 1920 இன்படி, குற்றம் சாற்றப்பட்டவர்களை மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.

ஆம், இச்சட்டத்தின் பிரிவு 4 இன்படி, நீங்கள் புரிந்துள்ள குற்றம் ஒரு வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்கும் போதும், அக்குற்றம் தொடர்பாக புலன் விசாரணை செய்ய தேவைப்படும் போதும் காவல்துறை எடுக்கலாம். இதனை நீங்கள் ஆட்சேபிக்கும் உரிமையும் உண்டு.

நீங்கள் ஆட்சேபித்தால் பிரிவு 5 இன்படி, நடுவரின் உத்தரவைப் பெற்றே எடுக்க முடியும். ஒருவேளை சுமத்தப்பட்ட குற்றச்சாற்றில் இருந்து விடுதலையானால், எடுக்கப்பட்ட அசல் ரேகைகளை திரும்பப்பெறவும் முடியும்.

குறிப்பு: அடையாளம் கானுதல் என்பது நம் உருவத்தை ஒளிப்படம் பிடிப்பது அன்று. கை, கால்களின் அளவுகளை அளந்து கொள்ளுதல் மற்றும் ரேகைகளை பதிவு செய்து கொள்வதே ஆகும்.

இதனால்தான், ஒவ்வொருவரும் சட்ட விழிப்பறிவுணர்வை பெறுங்கள்  என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறேன்.

ஆதார் அட்டைக்கு எதிராக வழக்கு தொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி கூட, முக்கியமாக தெரிவிக்க வேண்டிய இந்த சட்ட சங்கதிகளை தெரிவிக்கவில்லை. சரி, உத்தரவு போட்ட இரண்டு நீதிபதிகளாவது இதை தெரிவித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு தெரிந்திருந்தால்தானே தெரிவிப்பதற்கு!

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணங்களில், முக்கியமானது பொது வினியோக குடும்ப அட்டைகளில் போலிகள் இருப்பதாக சொல்கிறது.

அப்படி இருந்தால், அந்த போலி அட்டையை வைத்திருப்பவர்கள் மீதும், அந்த அட்டையை வழங்கிய அரசு ஊழியர்கள் மீதுமே குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமே தவிர, நூற்று இருபது கோடி மக்களை குற்றவாளிகளாக ஆக்கமுடியாது.

நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் இதையெல்லாம் எடுக்க அனுமதிக்கிறீர்கள் என்பதே என் கேள்வி

Posted onJanuary 10, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsஆதார் அட்டை கட்டாயமில்லை உச்சநீதிமன்றம்எரிவாயு உருளையைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயம்குற்றவாளிகளை அடையாளம் கானும் சட்டம் 1920Leave a comment

உங்களுக்கு எப்படி சொன்னா புரியும்?

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெவ்வேறான காரணத்தை, அப்பிரச்சினையை சந்திப்பவர்கள் சொல்வார்கள். ஆனால், அவைகள் அனைத்திற்கும் ஒரே பிரதாண காரணம் பணமும், இதனை பிரதானமாக (ண்ணு, ன்னு)ம் நம் எண்ணமுமே!

ஆம்! ஒவ்வொரு பிரச்சினையிலும், ஏதோ ஒரு வகையில் ஒளிந்திருக்கும் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு பணம் என்கிற பேய் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே பணம்தான் என்கிற நிலையில் உலகம் உழன்று கொண்டிருப்பதால்தான், கோடான கோடி ஊழல்கள் கூட சர்வ சாதாரணமாகி விட்டன.

ஊழல் என்றால், அரசியல்வாதிகள்தான், அதிகாரிகள்தான் செய்கிறார்கள் என்பதில்லை. தனி மனிதரும் கூட தனக்கு தெரிந்த வகைகளில் எல்லாம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு பணம், நற்குணம் கொண்ட தனி மனிதரைக் கூட விட்டு வைக்காமல், மிருகங்களாக்கி விட்டது.

இன்றைய உலகில் பலவிதமான பொருள்கள் மட்டுமல்லாமல் அன்பு, பாசம், மனிதத்தன்மை போன்ற எல்லாவற்றுக்கும் விலை வைக்கும் அளவுக்கு பணம் சர்வவல்லமை பெற்று, அதன் ஆதிக்கம் சமுதாயத்தின் எல்லா தட்டுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

சரி, இப்படிப்பட்ட பணத்திற்கு யார் மதிப்பு கொடுத்தது? பணம் என்றால் என்ன? எந்த ஒரு உயிரினத்திற்கும் தேவைப்படாத பணம் மனிதனுக்கு மாத்திரம் தேவைப்பட்டதன் உள்நோக்கம் என்ன? என்பன போன்ற விபரங்கள் எவருக்கும் விளங்குவதில்லை.

அதெப்படிங்க பணமில்லாமல் வாழ முடியும் என கேட்பவராக இருந்தால், இது குறித்த கொள்கை விளக்கதளத்திற்கு செல்லலாம். இத்தளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலை படிக்கலாம்.

உண்மையில் பணம் என்பது வெற்றுக் காகிதமே! 
ஆனாலும், அதற்கு மதிப்பு கொடுப்பதும் நாமே!!

இதனால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியான மாற்றங்களை எல்லாம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல, மக்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு ()ரிய விஷயமாக, மிக யதார்த்தமான வகையில் எடுத்துச் சொல்லும் வகையில் விரைவில் வெளி வரயிருக்கிறது, இரண்டு மணி, இரண்டு நிமிட நேர திரைப்படம் 500 & 5 (ஐநூறும் & ஐந்தும்)

பணம் என்னும் வெற்றுக் கலர் காகிதமானது 5 ரூபாய் 10 ரூபாய் கூட பெரிய விஷயமாக இருக்கும் அடித்தட்டு மக்களில் இருந்து 500 ரூபாய் 1000 ரூபாயையே சர்வ சாதாரணமான விஷயமாகப் பார்க்கும் மேல்தட்டு மக்கள் வரை எப்படியெல்லாம் பலரது கைகளில் ஒவ்வொரு நாளும் புகுந்து பல வகைகளில் புழங்குகிறது என்பதே இப்படத்தின் சாரம்.

எவ்வளவு பணம் படைத்த மனிதராக இருந்தாலும், மூச்சு நின்று விட்டால் பிணமே!

இத்தகைய சூழ்நிலையில் மனிதகுலம் உண்மையில் மதிப்பு கொடுக்க வேண்டியஅன்பானதுதன் செல்வாக்கை இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல், தன் உண்மையான அர்த்தத்தையும் இழந்து, இப்பணத்தின் ஆதிக்கத்தின் முன் உதட்டளவு வார்த்தையாகி அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதே இன்றைய உலகின் யதார்த்த நிலை.

மொத்தத்தில் பணத்தால் மட்டுமே மனிதகுலம் சீர்கெட்டு கிடக்கிறது என்பதை பறைச்சாற்றும் விதமாக,

காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க 
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க 
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க

கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான் 
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்

நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்

என்கிற பஞ்ச் வசனங்கள் ஆங்காங்கே பாடல்களாக இடம் பெற்றுள்ளன.

பொதுவாக திரைப்படத்தின் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்பார்கள். அரிதிலும் அரிதாக பெண்கள் பங்கேற்பார்கள். ஆனால், இப்படத்தில், ‘‘ஐந்நூறு ரூபாய் பணமே கதாநாயகனும், வில்லனும்’’. இதனால், பாதிக்கப்படுவது மக்களின் நீதி முதல் மீதி வரையென அனைத்தும் என்பதை வலியுறுத்தி

பணமே இல்லாத அன்பு மயமான ஒரு உலகத்தை குறித்த ஒரு சிந்தனையை விதைக்கும் நோக்கில், இன்றைய நடைமுறை சினிமாக்களின் அம்சங்களான வன்முறை, ரொமான்ஸ், யதார்த்தம், இருட்டு உலகின் போக்கு, சமுதாய புரட்சி சிந்தனை இவைகள் எதுவும் இல்லாமலும், ஸ்டூடியோ சம்பிரதாயங்கள் எனும் எல்லைகளைத் தாண்டியும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் திரையிலும், திரைக்குப் பின்னாலும் பங்களித்தவர்கள் அனைவருமே காசுக்காக அல்லாமல் நட்புக்காகவும், அன்புக்காகவும் தங்கள் உழைப்பை பங்களிப்பாக கொடுத்துள்ளார்கள்.


ஆம், இப்படத்திற்கு வித்திட்டுள்ள நால்வர் கூட்டணி சமூக அக்கரையில் நாட்டம் உள்ளவர்கள் என்பதால், அமெரிக்காவில் தாங்கள் பார்த்து வந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, நம் நாட்டுக்கு திரும்பியவர்கள் என்பதும், இப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் பிரபலங்கள் இல்லாத இவர்களின் உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் நம் நீதியைத்தேடிவாசகர்கள் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இதர செலவுகள் கைமீறிப் போய், எதையும் அடமானம் வைக்காமல் கடனும் வாங்கியாகி விட்டது.

மனித குலத்திற்கு பணம் தேவையற்றது என்பதை இந்திய பணத்தை வைத்து, தமிழில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் கூட, திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட தயாராகி விட்டார்கள். அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் கூட வெளியிட ஏற்பாடு ஆகி விட்டது.

ஆனால், நம் தமிழ்நாட்டில் ……………..

எப்படி சொன்னால் உங்களுக்கு புரியும் என்கிற வழிமுறையில் எடுக்கப்பட்ட படத்தை, எப்படி உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்பது குறித்த கடமையை உங்களிடமே கேட்கிறோம். இதனை கேட்டுப் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை இம்மின்னஞ்சல்களில் சொல்லுங்களேன்.

மின்னஞ்சல் <[email protected]>, <[email protected]>, <[email protected]>

Posted onJanuary 2, 2014CategoriesUncategorizedதலையங்கம்Tagsதிரைப்படம் 500 & 5,பணம்Leave a comment

கல்விகுறித்து மகாத்மா காந்தி

ஏழு மொழிகளில் காந்தியின் கையொப்பம்

எழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம்.

கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால், நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது.

கல்வியறிவு இல்லாத ஒரு விவசாயி யோக்கியமாக சம்பாதித்து பிழைக்கிறார். உலகத்தைப் பற்றிய சாதாரண ஞானமே அவருக்கு உண்டு. தன்னுடைய பெற்றோர்கள், தன் மனைவி, குழந்தைகள், கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது. ஒழுக்க நியதிகளை அறிவதோடு அதனை அனுசரிக்கவும் செய்கிறார்.

ஆனால், தன் பெயரைக் கூட அவருக்கு எழுத தெரியாது. அவருக்கு எழுத்தறிவை அளித்து அவரது இன்பத்தை கொஞ்சமாவது அதிகரித்து விட முடியுமா என்றால் முடியாது. மாறாக, அவரது நிலை குறித்தும், குடிசை குறித்தும் அதிருப்தியைதான் ஏற்படுத்த முடியும். இதற்கு அவருக்கு எதற்கு கல்வி?

நாம் மேனாட்டு சிந்தனை வெள்ளத்தில் மிதப்பதால் எது அனுகூலம், எது பிரதிகூலம் என்பதை கூட சீர்தூக்கி பார்க்க முடியாத கல்வியை கற்கிறோம், கற்றுக் கொடுக்கிறோம்.

ஆகையால் ஆரம்பக்கல்வியும், மேல்படிப்பும் முக்கியமான காரியத்தை செய்வதற்கு வேண்டியதே இல்லை. இவை நம்மை மனிதர்கள் ஆக்குவதில்லை. நாம் நம் கடமையைச் செய்வதற்கு உதவியாக இல்லை.

நீங்களும் நானும் பொய்யானதொரு படிப்பின் தீமையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அத்தீமையில் இருந்து நான் விடுபட்டு விட்டதாக கூறிக் கொள்கிறேன். என்னுடைய அனுபவத்தின் பலனை உங்களுக்கு அளிக்க முயற்சி செய்வதோடு, இதற்காக இப்படிப்பின் ஊழலையும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

கல்வியை நாம் பிரமாதப்படுத்தக் கூடாது என்று சொல்கிறேனே ஒழிய, எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடாது என்று சொல்லவில்லை. கல்வி காமதேனு அன்று. கல்வி விசயத்தில் கல்வி பயன் உள்ளதாய் இருக்கக்கூடும்.

நம் உணர்ச்சிகளை அடக்கி, நம் கோட்பாட்டையும் நாம் உறுதியான முறையில் அமைத்துக் கொண்டபின் கிடைக்கும் கல்வியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் ஆபரணத்தைப் போல், நம்மை அழகுபடுத்தவும் கூடும்.

ஆகையால், கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை.

நமது பழங்கால பள்ளிக்கூட முறையே போதுமானது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கே அதில் முதல் இடம்; அதுதான் (ஒழுக்கமே) ஆரம்பக் கல்வி. அந்த அடிப்படையின் மீது கட்டப்படும் கட்டிடம் நீடித்தும் இருக்கும்.

ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது, நம்மை அடிமைப்படுத்திக் கொள்வதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அடித்தளம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது. அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும், பலன் அடிமை என்பதே. சுய ஆட்சியைப் பற்றி சுய மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேச வேண்டியுள்ளது வருந்தத்தக்கதே.

ஐரோப்பியர்கள் வெறுத்துத் தள்ளிய முறைகளையே நாம் அனுசரிக்கிறோம். அவர்கள் உதறித்தள்ளி விட்ட முறைகளை எல்லாம் நாம், அறியாமையோடு பின்பற்றி வருகிறோம்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மொழிகளின் மதிப்பை உயர்த்த அந்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இங்கிலாந்தின் ஒரு சிறிய பகுதியே வேல்ஸ். வேல்ஸ்காரர்களிடையே வேல்ஸ் மொழியறிவை திரும்பவும் உயிர்ப்பிக்க பெரு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வேல்ஸ் மொழியிலேயே பேசும்படி செய்வதற்கான இயக்கத்தில், லிபரல் கட்சியின் தலைவரும், பிரிட்டீஷின் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீ லாயிட் ஜார்ஜ் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

ஆனால், நாம் ஒருவருக்கொருவர் தவறான ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறோம். நம் சிறந்த எண்ணங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எடுத்துக் கூறப்படுகின்றன. நம் சிறந்த செய்திப் பத்திரிகைகள் ஆங்கிலத்திலேயே பிரசுரமாகின்றன. இதே நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிப்பதாயின், எதிர்காலம் நம்மை கண்டித்துச் சபிக்கும்.

ஆங்கிலக் கல்வியை பெற்றதால், நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம். நயவஞ்சகம் கொடுமை ஆகியன அதிகரித்து விட்டன. ஆங்கிலம் அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி, மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்போது நாம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம் என்றால், அவர்களுக்குரிய கடனில், ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்.

நான் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால், அங்கே ஆங்கில மொழியையே உபயோகிக்க வேண்டும். நான் பாரிஸ்டர் ஆனதும், என் தாய்மொழியில் பேச முடிவதில்லை. நான் கூறுவதை என் மொழியிலேயே கூற முடியாமல், இன்னொருவருக்காக மொழி பெயர்க்க வேண்டும் என்பது வெட்கக் கேடானது. இது அடிமைதனத்திற்கான அடையாளம்.

இதற்கு நான் ஆங்கிலத்தின் மீது எப்படி குற்றங்குறை கூற முடியும். ஆங்கிலம் அறிந்த இந்தியராகிய நாமே, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதால், நாட்டின் சாபம் நம்மீதுதான் விழுமேயன்றி, ஆங்கிலத்தின் மீதன்று.

நாகரீகம் என்ற நோயினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலப் படிப்பு இல்லாமல் நாம் முற்றிலும் இருந்து விடமுடியாது. அதுவரை ஆங்கில அறிவை பெற்றிருப்பவர்கள், ஆங்கில மக்களிடம் தொடர்பு கொள்வதற்கும், அவர்களது நாகரீகத்தைப் பற்றி அவர்கள் எவ்வளவு வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்களுடைய குழந்தைகளுக்கு, தங்களது தாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்றோர் இந்திய மொழியையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தப்பின் ஆங்கிலம் தேவை என விரும்பினால், கற்றுக் கொள்ளட்டும். ஆனால், தேவையில்லை என்பதே முடிவான நோக்கமாக இருக்கட்டும்.

ஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது என்பதையும் விட்டு விட வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டியிருந்தால், அதில் கூட கற்றுக் கொள்ள வேண்டியது என்ன, வேண்டாதது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் படிப்பையும், பட்டங்களையும் மதிப்பதை நாம் விட்டு விட்டாலே ஆளுவோர் விழித்துக் கொள்வார்கள்.

நம் எல்லா மொழிகளையும் விருத்தி செய்ய வேண்டும். சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். மந்திரங்களை கற்றுக் கொள்வதான நடிப்பை கைவிட்டு, ஒழுக்கம் சம்பந்தமான படிப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

படித்த ஒவ்வொரு இந்தியரும், தம்தாய் மொழியுடன் இந்துவாக இருந்தால், சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியராக இருந்தால் அரபியையும், பார்ஸியானால் பாரசீகத்தையும், எல்லோருமே இந்தியையும் கற்க வேண்டும். சில இந்துக்கள் அரபு, பாரசீக மொழிகளை அறிய வேண்டும். சில இஸ்லாமியரும், பார்ஸியரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும்.

வட நாட்டினரும், மேற்கு பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இந்தியே பொது மொழியாய் இருப்பதோடு, அதை இஷ்டம் போல் பாரசிக அல்லது நாகரி லிபியில் எழுத வேண்டும்.

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை முன்னிட்டு இவ்விரு லிபிகளையும் அறிந்திருப்பது அவசியம். இதை நாம் செய்ய முடிந்தால், ஆங்கிலத்தை சிறிது காலத்திலேயே விரட்டி விட முடியும்ஆங்கில அடிமைகளாகிய நமக்கு இவையெல்லாம் அவசியம்.

நமது அடிமைத்தனத்தினால் நாடே ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது. நாம் பெறும் சுதந்திரமே நாட்டின் சுதந்திரம்.

இந்தியா தெய்வத் தன்மையற்றதாக என்றுமே இராது. அசல் நாஸ்திகம் இந்நாட்டில் ஓங்காது. மதக்கல்வியைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குத் தலை சுற்றுகிறது.

நம் மத போதகர்கள், நயவஞ்சகர்களாகவும், சுய நலமிகளாகவும் இருக்கின்றனர் என்றே அவர்களை அணுக வேண்டியிருக்கிறது. முல்லாக்கள், தஸ்தூர்கள், பிராமணர்களின் கையிலிருக்கிறது விசை. இவர்களுக்கு நல்ல புத்தி இல்லாமல் போகுமானால், ஆங்கிலப் படிப்பினால் நாம் பெற்றிருக்கும் சக்தியை மதப்படிப்புக்காக நாம் உபயோகிக்க வேண்டும். இது அதிகக் கஷ்டமானதன்று.

சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே அசுத்தமாகி இருக்கிறது. அந்தச் சிறு பகுதிக்குள் இருப்பனவற்றை மாத்திரமே சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ரகத்தை சேர்ந்த நாம்நான் சொல்லுவது கோடிக்கணக்கானவர்களுக்குப் பொருந்தாது. ஆகையால் நம்மைக் கூட சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

பழமையாக இருந்த நிலையை இந்தியா அடையும்படி செய்வதற்கு நாமும் அதற்கு திரும்ப வேண்டும். நமக்குச் சொந்தமான நாகரீகத்தில் ஏற்றம், தாழ்வு, சீர்திருத்தங்கள், விளைவுகள் ஆகியன இயற்கையாகவே இருக்கும். ஆனால், ஒரு முயற்சி தேவை. அதுதான், மேல்நாட்டு நாகரிகத்தை துரத்துவது; மற்றவை எல்லாம் தொடர்ந்து தாமே வரும்.

* மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டு எழுதிய இந்தியத் தன்னாட்சி என்கிற நூலின் கல்வி என்கிற தலைப்பில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர் வாரண்ட் பாலா.

Posted onOctober 7, 2013CategoriesUncategorizedதலையங்கம்நமக்கான அங்கீகாரம்Tags'கல்வி' குறித்து மகாத்மா காந்திஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பதுஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பதுஆரம்பக்கல்வியும்,எழுத்தறிவுகல்வி காமதேனுகல்வியறிவுகல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லைசுய ஆட்சிதாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்கநல்வழியில்பழங்கால பள்ளிக்கூட முறையேமேல்படிப்பும்Leave a comment

நீதிமன்ற (மா, கோ)மாக்கள்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொய்யரை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மீது, நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்ததாக பொய்யர்களின் தலைவர் மோகனகிருஷ்ணன் பதிவாளரிடம் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.

தாங்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, சட்டப்படி வழக்கு பதிவு செய்து தனிப்படைக்கு தலைமை ஏற்று கைது செய்ய முயன்ற சக காவல் ஊழியரை, காவல்துறையே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

பொதுவாக காவல்துறைக்கும், பொய்யர்களுக்கும் தீராத பகையும், பழிவாங்கும் படலமும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில், பொய்யர்களே காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். காரணம், காவல்துறை ஊழியர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், அவர்களும் அரசுப் பொய்யர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளதுதான்.

நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் என்கிற மகாத்மா காந்தியின் கருத்து அரசுப் பொய்யர்களுக்கு முற்றிலும் பொருந்தாது.

ஏனெனில், இவர்கள் நீதிபதிகளின் மாமாக்கள்இந்த மாமாக்கள் மனது வைத்து ஒத்துழைக்கவில்லை என்றால், குற்றவியல் வழக்குகளில் நீதிபதிகள் சட்டத்துக்குப் புறம்பாக எதுவுமே செய்ய முடியாது.

இதனால், காவல்துறை தொடுக்கும் உண்மையான வழக்குகளில் கூட, குற்றவாளிகள் நீதிபதிகளின் மாமாக்கள் ஆன அரசுப் பொய்யர்களை சரிகட்டி விடுதலையாகி விடுகிறார்கள்.

காவல் ஊழியர்களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டால், அரசுப் பொய்யர்கள் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தாங்கள் பதிவு செய்யும் குற்ற வழங்குகளை தாங்களே ஏற்று நடத்தலாம். தக்க தண்டனையை வாங்கித் தரலாம். தவறு செய்யும் நீதிபதிகளை நம்மைப் போல வறு, வறு என வறுத்தெடுக்கலாம்.

இதற்கு குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 302(1) இன்படி, உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத உயர்நிலை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 302(2) இன்படி, இதனை புகார் கொடுத்தவரே (பொதுமக்கள் எவரும்) அரசுப் பொய்யரை நீக்கி விட்டு, நமது பாணியில் வழக்கை நடத்த முடியும்.

கரூரைச் சேர்ந்த மருத்துவர் சுபா சுந்தரம் என்கிற நீதியைத்தேடிவாசகர் 2001 ஆம் ஆண்டிலேயே, தனது கணவனுக்கு எதிரான தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்த வரதட்சனை வழக்கை, சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடத்தி இருக்கிறார்.

இப்படி செய்ததற்கு முக்கிய காரணம், இவரது கணவரின் சகோதரர் அந்நீதிமன்றத்தில் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பொய்யர் என்பதால், அரசுப் பொய்யரை சரி கட்ட முயற்சித்ததே!

நீதிமன்ற வளாகத்திற்குள் யாரையும் கைது செய்யக் கூடாது என்று பொய்யர்களும், கொள்ளையர்களும் தங்களது இல்லாத சட்ட மற்றும் இஷ்ட நடைமுறையை வைத்திருக்கிறார்கள்.

ஏனெனில், இவைகள்தானே இவர்களின் / குற்றவாளிகளின் புகலிடம். இதே அற்ப காரணத்தை 2009 ஆம் ஆண்டில், உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறையின் தடியடியின் போதும் பொய்யர்கள் சொன்னார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் தாங்கள் பொதுமக்களின் கூலிக்கும், வரிக்கும் மாரடிப்பவர்கள் என்பதை உணர கூட போதிய பொது அறிவில்லாமல், நீதிமன்ற வளாகமும், நீதிமன்றமும் தங்களது பாட்டன், முப்பாட்டன் சொத்து என்று கருதுவதுதான்.

உண்மையில், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 77 இன்படி, கைது செய்வதற்கான பிடியாணையை, இந்தியாவின் எந்த இடத்திலும் நிறைவேற்றலாம் என்று சட்ட விதி தெளிவாக அறிவுறுத்தும் போது, பிடியாணையே தேவையில்லாமல் கைது செய்வதற்குரிய குற்றத்தை புரிந்த ஒருவருக்கும் பொருந்தும்.

மேலும், விதி 44 (2) இன்படி, நடுவரின் முன்னிலையில் உள்ள ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கலாம் என்கிற சூழ்நிலை இருந்தாலே அவரை தாமே நேரடியாக கைது செய்யலாம் அல்லது கைது செய்யுமாறு பணிக்கலாம்.

மொத்தத்தில், நீதிமன்றமோ அல்லது அதன் வளாகமோ கைது செய்வதற்கு தடை விதிக்கும் இடமல்ல. மாறாக, தாராளமாக அனுமதி வழங்குமிடம்.

ஆனால், நீதிமன்ற (மாகோ)மாக்களோ நீதிமன்றங்கள் இந்தியாவின் எல்லைக்குள் இல்லை என்று கருதுகிறார்கள் போலும்.

Posted onSeptember 18, 2013CategoriesUncategorizedதலையங்கம்Tagsஇந்தியாவின் எல்லைக்குள் இல்லைஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன்நீதிபதிகளின் மாமாக்கள்மோகனகிருஷ்ணன்1 Comment

மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி

ஒரு நூலாசிரியர், இக்கால வைத்திய முறை முழுவதையும் உபாஸ் மரத்திற்கு ஒப்பிட்டிருக்கிறார். பிறரை உறிஞ்சி வாழும் வக்கீல் தொழிலையும், வைத்தியத் தொழிலையும் அம்மரத்தின் கிளைகளோடு ஒப்பிட்டிருக்கிறார்.

உபாஸ் என்பது, ஜாவா பகுதியிலுள்ள ஒரு நச்சுமரம். அதில் வரும் பாலை எடுத்து காட்டு மக்கள் அம்புகளின் முனையில் தடவுவார்கள். அந்த அம்புபட்டவர்கள் கட்டாயம் இறந்து போவார்கள். அதன் நிழலில் எந்தச் செடியும் நசிந்து போகும். அவ்வளவு கொடியது அம்மரத்தின் விஷம்.

வைத்தியத் தொழிலைக் குறித்து எனக்கு ஒரு சமயம் ஆர்வம் இருந்தது. நாட்டின் நன்மைக்காக ஒரு டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அந்த எண்ணம் இப்போது எனக்கு கிடையாது.

நம் வைத்தியர்கள் ஏன் கௌரவமான அந்தஸ்தை அடைவதில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆங்கிலேயர்கள், வைத்தியத் தொழிலை சரியானபடி உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மை முற்றிலும் நிலை தவறி போகும்படி செய்து விட்டனர்.

நம் உடம்பைப் பற்றி, நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. கெட்ட செயல்களில் ஈடுபட்டு விட்டோம். இதனால், நமக்கு நோய் ஏற்படுகிறது. நம்மை ஆதரிக்கும் வகையில் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவி செய்வதால்தான் மீண்டும், மீண்டும் அதுபோன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு மருந்தை உட்கொண்டதன் மூலமாக உடல் சிரமமின்றி இருந்தாலும், மனம் பலவீனப்பட்டு விடுவதால், அதனை அடக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

இவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவவில்லை என்றால், இயற்கை தன்னுடைய வேலையைச் செய்யும். ஆதலால், அதற்கான தண்டனையை அனுபவிப்போம். இதனால், நம்மை நாமே அடக்கியாளும் ஆற்றலும் கிடைத்து, கெட்ட காரியங்களில் இருந்து விடுபட்டு ஆனந்தமாய் இருந்திருப்போம்.

இவர்கள் உபயோகிக்கும் மருந்துகள் பலவற்றில் மிருகக் கொழுப்போ அல்லது மதுத்திரவங்களோ கலந்திருக்கின்றன. பா(, )ங்களைப் பரப்பும் ஸ்தாபனங்களே ஆஸ்பத்திரிகள்.

நாம் நாகரீகம் அடைந்திருப்பதாக பாசாங்கு செய்து, தடுக்கப்பட்டிருப்பவைகளை மூட நம்பிக்கைகள் என்று புறங்கூறி, நமக்கு இஷ்டமானவைகளில் ஈடுபட டாக்டர்கள் தூண்டுகிறார்கள். இதனால், நமக்குள்ள புலன்களை அடக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. ஆண்மையற்றவர்களாகவும் ஆகி விடுவதால், நாட்டிற்கு தொண்டு செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறோம்.

ஆங்கில வைத்திய முறையை கற்றுக் கொள்வது, நமது அடிமைத்தனத்தை பலப்படுத்துவதாகும். இம்மருத்துவம் மனித வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக அன்று. மாறாக, கௌரவம் மற்றும் செல்வம் சேர்ப்பதற்காகவே என்பதால், நமக்குத் தீமையே.

ஆங்கில மருத்துவர்கள் தங்களை அறிவு மிக்கவர்கள் என்பது போல் காட்டி, ரூபாய் கணக்கில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். அம்மருந்துகள் உண்மையில் சில தம்படிகளே (ஒரு ரூபாய்க்கு 192 பைசாக்கள். ஆகையால், தம்படிக்கு சில நயா பைசாக்கள் என்று பொருள்) பெறுமானவை.

ஆனாலும் நீங்களோ, உங்களின் அறியாமையினாலும், ஏதோ நோய் நீங்கும் என்ற நம்பிக்கையினாலும், உங்களை ஏமாற்ற வாய்ப்பு தருகிறீர்கள்எல்லோரிலும் படுமோசமானவர்கள் ஆங்கில மருத்துவர்கள்.

பெரிய பட்டங்களை பெற்ற டாக்டர்களை விட, போலி வைத்தியர்களே மேல் என்று சில சமயங்களில் எண்ணுகிறேன். மனித வர்க்கத்திடம் அன்பு காட்டுவது போன்று வேஷம் போடும் டாக்டர்களை விட, நாம் நன்கு அறிந்த அரைகுறை வைத்தியர்களே மேல் அல்லவா?

மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டில், தனது 40 வது வயதில் எழுதிய இந்திய சுயராஜ்யம் நூலின் 12 வது கட்டுரையில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கி ஒருங்கிணைத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

Posted onSeptember 3, 2013CategoriesUncategorizedதலையங்கம்Tagsஅடிமைஆங்கில மருத்துவர்கள்.ஆஸ்பத்திரிகள்தம்படிநோய்மகாத்மா காந்தி,மருத்துவம்மருந்து மாத்திரைகள்வைத்திய சேவை1 Comment

பட்டுப்போகும் பாரம்பரியம்!

நீதியைத்தேடிநீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற நமது சட்ட விழிப்புணர்வு நூல், பாதிக்கப் பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்ற நிலைமாறி எல்லா தரப்பினருமே விரும்பி படிக்கக்கூடிய ஒரு நூலாக இருக்கிறதுஇந்நூல்கள் குறிப்பாக சட்டம் தொடர்பான அதிகாரங்களைத் செலுத்துகிற காவல் துறையினர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளின் நீதிக்குப் புறம்பான செயல்பாடுகளை தோலுரித்து காட்டுகிறது.

படிக்கிற பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் வரை என்னிடம் தவறாமல் கேட்கிற கேள்வி, ஒவ்வொருத்தரும் வாதாடலாம் என்கிற போது, ‘‘எதுக்குங்க வக்கீல்கள் எல்லாம் வக்கீலுக்கு படிக்கிறாங்க..?’’

வக்கீலுக்கு படிக்கிற அந்தந்த பொய்யர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை, படிக்காத என்னை கேட்டால்,நேர்மையான தொழிலைச் செய்ய வக்கில்லாமதான், வக்கீலுக்கு படிக்கிறாங்க…’ என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல முடியும்?

பொதுவாக ஒரு தொழில் செய்பவர்களைப் பற்றி விமர்சித்தால், அவர்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் கோபம் கொள்ளத்தான் செய்வார்கள்.

ஆனால், இதிலிருந்து முற்றிலும் விதி விலக்காக கீழ்நிலைக் காவலர்கள் முதல் மேல்நிலைக் காவல் ஊழியர்கள் வரை படித்து விழிப்பறிவுணர்வு பெற்றுள்ளோம் என்றும், அதில் எங்களைப்பற்றி எதுவும் தவறாக சொல்ல வில்லை என்றும், உண்மையை தவறு செய்தவர்களை 100% ஆதாரப்பூர்வமாக, அனுபவப்பூர்வமாக புகைப் படங்கள் மற்றும் வழக்கு எண்களுடன் கூட விமர்சித்து இருக்கிறீர்கள் என சொல்லி மகிழ்கிறார்கள்.

மறுபக்கமோ வக்கீல்கள் முதல் நீதிபதிகள் வரை படித்து தெரிந்து கொள்கிறார்கள் என்பது வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் மூலமாகவே அவ்வப்போது தெரிய வருகிறது. நீதிமன்றங்களுக்கு நன்கொடையாக கொடுத்து விடுவதால் நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் படிப்பது எளிதாகி விடுகிறது. ஊழியர்கள் படித்தால், நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்து சில நீதிபதிகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று வைத்துக் கொள்கிறார்கள் என்பது (ந்)நீதிமன்ற ஊழியர்கள் மூலம் தெரிகிறது.

(ந்)நீதிமன்ற ஊழியர்கள் படித்தால் கூட, (ந்)நீதிபதிகள் (அந்நீதி, அப்பீதி, அப்பேதி)மன்றத்தின் தலைமை ஊழியர்கள் என்பதற்காக மதித்தாக வேண்டும். ஆனால், வீட்டில் பொண்டாட்டி புள்ளைங்க படிச்சா, உங்க மேல இருக்கிற கோவத்துல, ‘‘இவ்வளவு ஃபிராடு பண்ணுற நீயெல்லாம் ஒரு நீதிபதியான்னு’’ கேட்டு தூக்கிப் போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்க

அப்படியேதும் அசம்பாவிதம் நடந்து, படக்கூடாத இடத்துல பட்டு, உங்க உயிருக்கு ஏடா கூடமா எதாவது ஆகிப்போச்சுன்னா, கோர்ட்டுக்குன்னு கொடுத்தத, திருட்டுத்தனமா வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போனது, .பி.சி.. (யுவர் ஆனர், நீதியைத்தேடிபடிச்ச உங்களுக்கு தெரியாத சட்டமில்ல. அதனால அந்த கேப்புல என்னன்ன பிரிவுகள் வருமோ அதெல்லாம் கேர்(, பு)ல்லா போட்டுக்குங்கவடிவேலு) இன்படி, உங்க தப்பேங்கிற வகையில், நாங்க பொறுப்பாக மாட்டோம்.

உங்க கூட்டு கொள்ளையர் சந்துரு வேற, மதுரையில தாலி கட்டிய கணவன் வேலி தாண்டாதே என்று சொல்லி தடுத்ததற்காக, பெற்ற மகளையே கற்பழிக்க முயற்சித்தார், ஆதலால் நானே அடித்து கொண்டு விட்டேன் என திட்டம் போட்டு, கூலிப்படை வைத்து, கொடூர ஆயுதங்களைக் கொண்டு, கொலை செய்ய தூண்டியும், துணை நின்று மனைவி செய்த கொலையையே, தப்பில்லை; தற்காப்பு! என தாண்தோன்றித் தனமாக தீர்ப்பு சொல்லி உள்ளதால், இதைச் சொல்லியே உங்களது மனைவியும், துணைவியும் தப்பிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்

அதனால, உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்திக் கொள்வது என்னான்னா, அந்த தீர்ப்புரையை நாங்க ரத்து செய்து, அம்மனைவியை ஜெயிலுக்கு அனுப்புற வரைக்குமாவது, வீட்டுல நல்ல புள்ளையா, பொண்டாட்டி புள்ளைங்க சொல்லுறத கேட்டுகிட்டு, பொட்டிப் பாம்பா, அடங்கி ஒடுங்கி பத்திரமா இருந்துக்கோங்க

நீதியைத்தேடிநூலைகளை வாங்க நினைக்கிற வக்கீல்கள் எங்களை தொடர்பு கொள்ளும் போது, இந்நூல்கள் உங்களின் தொழிலுக்கு நேரெதிரான கொள்கை கொண்டது, வக்கீல்களையும், நீதிபதிகளையும் தீ(தி)ட்டி எழுதியிருப்போம், ஆதலால் தேவையில்லாமல் காசை செலவு செய்து, வாங்கி படித்து விட்டு டென்ஷன் ஆகாதீர்கள் என்போம்.

ஒருசிலர், நாமளே சட்ட ரவுடிகள்நம்மள திட்டுற அளவுக்கு யாருக்கு தைரியம் என யோசிப்பார்கள். ஆனாலும், அப்படி என்னதான் சொல்லியிருக்கீங்கன்னு பார்க்கனும் என்பார்கள்.

ஒருசில பொய்யர்களோ இல்லையில்லை, எங்களின் நீதிபதி அதை மறைத்து வைத்து (படி, பார்)த்துதான் தீர்ப்பு சொல்கிறார். அதனால், நாங்களும் படித்துக் கொண்டால், தீர்ப்பை பெற உதவியாய் இருக்கும். அதனால்தாம் கேட்கிறோம் என கெஞ்சியே கேட்கிறார்கள்.

வாங்கி படித்து விட்டு, உண்மையத்தானே உடைச்சி சொல்லியிருக்கோம் என நினைக்கிற பொய்யர்கள், ‘சார் அவரு எங்கள திட்டலஎங்களோட அறியாமையதான திட்டுறாருஎன சொல்லி நட்பு உறவாடுகிறார்கள். 
பதிலுக்கு நாமும் உறவாடினால், நீதிமன்றத்துல நீதிபதி முதல் யார் யார் என்னென்ன தில்லுமுல்லு செய்யிறாங்க.. எப்படிச் செய்யிறாங்கஎந்தெந்த கேசுக்கு, யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறோம் அப்படீன்னு நமது கருத்தை ஆதரித்து, பகிரங்க பட்டியல் போடுறாங்க

ஆனாலும், அப்பொய்யர்கள் சொன்னது உண்மை என நம்பி, அப்படியே வெளியில சொல்ல முடியாது. ஏன்னா, வாங்குற கூலிக்கு பொய் சொல்றதே, அவங்க தொழில் தர்மமாக இருக்கும் போது, நாம கொடுக்காத கூலிக்கு சொல்லுறது மட்டும் எப்படி உண்மைன்னு ஏத்துக்க முடியும்!

ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் கூட, எல்லா பொய்யர்களும், கொள்ளையர்களும் சேர்ந்து செய்யிற திருட்டு விபச்சார செயலுக்கு, ஓரிரு பொய்யர்களை மட்டும் எதுக்கு தர்ம அடி வாங்க வைக்கோனும்?

இவர்களே, முதலில் சலுகை விலையில் எங்களுக்கு 500 செட் புத்தகங்களை கொடுங்கள். பிறகு 5000 செட்டுக்கு ஆர்டர் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொரு வக்கீலுக்கும், நீதிபதிக்கும் கொடுத்து படிக்கச் சொல்லனும் என்று வியாபாரத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள்.

பொதுவுடைமை என்பதால், உங்களது பெயரிலேயே அல்லது உங்களது வழக்கறிஞர் சங்கப் பெயரிலேயே, நீதியைத்தேடிநூல்களை அச்சடித்து தருகிறோம் என்றால், வக்கீல் ரவுடிகளிடம் யார் தர்ம அடி வாங்குவது என்கிற எண்ணத்தில், அய்யோ வேண்டவே வேண்டாம் என்று அலறுகிறார்கள்.

உன் நண்பர் யார் என்று சொல்; உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பதற்கு இணங்க வக்கீலின் உதவியாளர்கள் வழக்கில் சிக்கிக் கொண்டால், நம்புவது அவ்வக்கீலை அல்ல. நீதியைத்தேடிநூல்களைத்தான்

நீதித்துறையால் பழிவாங்கப்பட்ட நீதிபதி (நடுவர்) நம்புவதும் நீதியைத்தேடிநூல்களைத்தான்

தப்பித்தவறி சட்டப்படிப்பு படிக்கின்ற யோக்கியமாணவர்கள் எவராவது இருந்து படித்து விட்டால், படிப்பை பாதியிலேயே கை விட்டுட்டு, விபச்சாரத்தை மூடி மறைக்க உதவும் கருப்பு கோட்டையும் கை விட்டுட்டு, நீதியைத்தேடிகுறித்த கருத்துப் பிரச்சாரத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும், கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள். தனக்காக தானே வாதாடலாம் என தெரியாமலும், எப்படி போராடுவது என புரியாமல் போராடி, பொய் வழக்குகளால் சிறைக்கு சென்று, குடும்பம் பாதிக்கப்பட்டு, வக்கீல்களால் வஞ்சிக்கப்பட்டு, நான் சொல்வது போலவே, பாதுகாப்புக்காக வக்கீலுக்கு படித்து, இதுவும் பயனில்லை என நீதியைத்தேடிபடித்தப்பின் முடிவெடுத்தவர்கள்.

படித்து முடித்து வக்கீல் தொழிலுக்குள் இறங்கிய இளைஞரோ“You made me hate my advocacy profession… Really I never read the law in my five year college life but your five books makes it so…. Really your work is very honour.. Hats off you….” என பகிரங்கமாக முகநூலில் நூல் விட்டுட்டு, வேறு வேலை தேடுவதாகவும், தன்னால் இயற்ற நிதி பங்களிப்பை செய்வதாகவும் சொல்கிறார்.

நீதிபதியாகலாம் என்கிற எண்ணத்தில் இருந்த ஒருவர்,நீதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி கட்டுரையை படித்தப்பின்“ya very good, let us all follow this. but sure i will not become a judge anymore” என பின்னூட்டம் இடுகிறார்.

இந்தியாவின் 25 வது தலைமை நீதிபதி நீதியைத்தேடிநூல் குறித்து என்ன கருத்து சொன்னார் என்று அடுத்தப்பதிவில் பார்ப்போம்.  மொத்தத்தில், பொய்யர்களின் பாரம்பரியம் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.

Posted onAugust 26, 2013CategoriesUncategorizedதலையங்கம்Tagsadvocatelawyer,policeWarrant Balaw.இவ்வளவு ஃபிராடு பண்ணுற நீயெல்லாம் ஒரு நீதிபதியான்னுநிதிபதி சந்துருநீதிபதிநேர்மையான தொழிலை,பொய்யர்களே! இடைத்தரகர்களே!!மிதிச்சாலும் மிதிப்பாங்க,வக்கில்லாமதான்வக்கீலுக்கு படிக்கிறாங்கவக்கீல்Leave a comment

பிச்சைகள் பலவிதம்!

லஞ்சம் என்பதற்கு சுத்த தமிழில் கையூட்டு என்கிறார்கள். இதை விட பிச்சை என்று சொல்வதே மிகவும் சரியானதாக இருக்கும். ஏன், எப்படி, எதற்காக என்று பார்ப்போம்.

பொதுவாக, நாம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவு மற்றும் உடமைகள் கேட்டு வருபவர்களை தான் பிச்சைக்காரர்கள் என்கிறோம். இவர்களுக்கு அரசு அங்கீகாரமாக, ‘‘வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்’’ என்று பெருமையாக சான்றிதழும் கொடுக்கிறது.

ஆனால், உண்மையில் பார்க்கப்போனால் நாட்டில் பலவேறு விதங்களில் பிச்சைக்காரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பிச்சைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னால், இல்லையில்லை. நான் பிச்சை போடுவதே இல்லை என்று விவாதம் செய்ய விரும்புபவர்கள் எப்படியெல்லாம் பல்வேறு மாறுபட்ட விதங்களில் பிச்சைப் போடுகிறீர்கள் என்பதை பார்ப்போம்.

தெருவோர, சாலையோர மற்றும் வீடு தேவிவரும் பிச்சைக்காரர்கள் தவிர, ‘‘அனுதினமும் மக்களை சந்திக்கும் பிச்சைக்காரர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள்தாம்’’.

போக்குவரத்துறை என்று எடுத்துக் கொண்டால் சொந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு பணப்பிச்சை போடுகிறார்கள். வாகன ஒட்டிகள் அல்லாத பிற பயணிகள் சில்லரையை கொடுக்க விரும்பாத நடத்துனர்களுக்கும், கொண்டு செல்லும் சுமைக்கு கட்டணம் அல்லாது கூடுதல் பணம் கேட்கும் நடத்துனருக்கும், இவரின் மூலமாக ஓட்டுனருக்கும் பணப்பிச்சை போடுகிறார்கள்.

நெடுந்தொலைவு பயணத்தில் வழியோர உணவகங்களில் அப்பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதன் மூலமாக அப்பேருந்தின் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் உணவுப்பிச்சை போடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் கண்டும் காணாத மாதிரி இருக்கும் அப்போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு எந்த விதத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் பிச்சைப் போடப்படுகிறது என்பது தெரியவில்லை.

மொத்தத்தில், அரசு வரி என்கிற பெயரில் குடிமக்களிடம் நம்மிடம் இருந்து பிச்சையை சட்டப்பூர்வமான கட்டாயமாக்கி (பிடுங்கி) தனது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக தன் ஊழியர்களுக்கு பல்வேறு வகைகளில் வாரி வழங்குகிறது.

இதில் அரசையும், அது சார்ந்த ஊழியர்களை மட்டும் குறை சொல்வது என்பது நடுநிலையான சிந்தனையாக இருக்காது. மாறாக, பல்வேறு தரப்பட்ட மக்கள் எப்படி எல்லாம் அதிநுட்பமான முறையில் பிச்சை எடுக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் தங்களின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தி பல்வேறு விதங்களில், விதங்களில் பிச்சை எடுக்கின்றன.

லஞ்சப் பிச்சையை ஒழிப்பதற்காக புறப்பட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஆண்டுச் சந்தா அல்லது ஆயுள் சந்தா என்ற பெயரில் பிச்சை எடுக்கின்றன.

சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் அவர்களை மூலதனமாக வைத்து விவரிக்க இயலாத வகையில் பல்வேறு விதங்களில் பிச்சை எடுக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளை ஏமாற்றி விட்டு முதலாளிகளோடு கை கோர்த்து விடுகின்றன.

மொத்தத்தில், தொண்டு (செய்வதற்காக புறப்பட்ட) நிறுவனங்கள் எல்லாம் ஃபண்டு நிறுவனங்கள் ஆகி விட்டன. தொண்டு நிறுவனங்களை சல்லடை போட்டு சலித்தாலும் கிடைப்பதில்லை என்பதைப்பற்றி பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், லஞ்சப் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதுதானே முக்கியம்.

லஞ்சம், கையூட்டு என்பது ஒரு கேவலமான வார்த்தையல்ல. மாறாக, புனிதமான வார்த்தைகள் என்றாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ‘‘பிச்சை’’ என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அருவருக்கத்தக்க சொல்லாக கருதப்படுகிறது.

எனவே, இனி யாராவது எந்த விதத்திலாவது லஞ்சம் கேட்டால், ‘‘அதற்கு பதிலாக எனக்கு பிச்சை போட்டு பழக்கமில்லை. பிச்சை போடுபவர்களாக பார்த்து கேளுங்கள்’’ என்றோ அல்லது ‘‘பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது தர்மம். ஆனால், உங்களுக்கு போடுவது அதர்மம்’’ என்றோ பலர் அறிய பகிரங்கமாக ஒருமுறைச் சொல்லிப் பாருங்களேன்.

தனது மானம், மரியாதை, கௌரவம் என எல்லாம் ஏற்கனவே இருந்தது போலவும் ஆனால், தற்போது போய் விட்டது போலவும் கருதி, அதனை மீட்டெடுக்கும் விதமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ கூட உங்களிடம் இருந்து பிடுங்கிய லஞ்ச பணத்தை கூட, பலர் அறிய திரும்ப கொடுத்து விடுவார்கள் என்பது எனக்கு பலவிதங்களில் கிடைத்த சுவரசியமான அனுபவம்.

அதோடு, வேறு யாரிடமும் கூட இது போன்று பிச்சை எடுக்க வெட்கப்படுவார்கள்.

ஆம்! மனம் விரும்பி கொடுப்பது மட்டுமே தருமம். கேட்டு கொடுப்பது பிச்சையேதான் என்பதால் இந்தச் சொல்லும் அனைத்து சூழ்நிலையிலும், அனைத்து இடங்களிலும், உங்களின் லஞ்சப் பணத்தை காப்பாற்றி லஞ்சத்தை ஒழிக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும் என நம்புகிறேன்.

(மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் விரைவில் வெளிவர உள்ள கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழின் தொகுப்பு நூலில் இருந்து)

Posted onAugust 19, 2013CategoriesUncategorizedதலையங்கம்Tagsஅரசுஆயுள் சந்தா,கையூட்டுசிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களைதன்னார்வ அமைப்புகள்தர்மம்தொழிற்சங்கங்கள்நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள்,பிச்சைலஞ்சத்தை ஒழிக்கலஞ்சம்வரிவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்Leave a comment

மருஅம்மா ஆக வேண்டிய மாமியார்

இன்றைய சமுதாயம் பல வழிகளில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும், சில வழிகளில் மிக மோசமான விளைவுகளை சந்தித்த படியே உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற நிலை மாறிப்பல காலம் ஆகிப் போச்சு. இன்றைய நிலையில் பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் வேறு விதமாக அல்லவா இருக்கிறது? ஒரு பெண் சரியாக இருந்தால், அந்த குடும்பமே நல்வழிப்படும் என்பார்கள். குடும்ப தலைவி என்பவள் அத்தகைய சக்திகள் படைத்தவளே! ஆனால், எத்தனை குடும்பத் தலைவிகள் செவ்வனே செய்கிறார்கள்?

பெண் என்பவள் மண்ணுக்கு நிகர் அன்றோ! மண்ணை நாம் எவ்வளவுதான் வெட்டினாலும், கொத்தினாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு நமக்கு நன்மையை மட்டுமே அல்லவா செய்கிறது. அதுபோல்தானே பெண்களும் தன்னை வருத்திக் கொண்டு மனித சந்ததிகளை வளர்க்கிறார்கள்.

ஆனால், சில பெண்களோ சுயநலம் என்ற நெருப்பை தன்னைச் சுற்றி எறிய விட்டு தன்னையும் அழித்துக் கொண்டு, தன் உற்றார் உறவினர்களையும் அல்லவா அழிக்கிறார்கள்.

நேற்றைய மருமகள்தான் இன்றைய மாமியார் என்பது சில பெண்களுக்கு மறந்தே போகிறது.

திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் தாய் வீட்டில் பொறுப்புகள் அதிகமின்றி சுதந்திர பறவையாக சுற்றித் திரிகிறாள். ஆனால், மணமானபின் நிறைய பொறுப்புகள் கூட குடும்பத்தலைவி என்னும் புதிய பதவியை ஏற்கிறாள்.

இங்குதான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது. தன்தாய் வீட்டில் சற்றி திரிந்த போது என்ன திட்டினாலும், ஏசினாலும் அதை அமுத மொழியாக தாங்கி கொண்டவள், மாமியார் வார்த்தைகளை மட்டும் இடி தாங்கி போல் தாங்கி கொள்ள மறுக்கிறாள்.

தன் வாழ்க்கையில் இணைந்த தனது கணவனை, குழந்தை முதல் குமரன் வரை தாலாட்டி, பாலூட்டி, நோய் நொடிகளில் காப்பாற்றி அவனுக்காக கண் விழித்து, கண்ணீர் வடித்து வளர்த்து, தனக்கு கல்யாணம் செய்து வைத்த மாமியார், இவள் மருமகளாக வந்து நுழைந்த அடுத்த நிமிடமே மாமியார் தன் பொறுப்புகளையும், ஏன் பாசத்தையும் கூட மறந்து ஒரு மூலையில் முடங்கி கிடக்க வேண்டும் என நினைக்கிறார்களே!

இது எந்த வகையில் நியாயம்?

சற்றே சிந்தியுங்கள்விட்டுக் கொடுப்பதற்கு தாய்ப்பாசம் என்ன வாடகைத்தாய் வியாபாரமில்லையே!

உங்களுக்கு கணவனை திருமணம் செய்து கொண்ட அன்றுதான் தெரியும். ஆனால் உங்கள் மாமியாருக்கோ கருவிலேயே தெரியும். என்னடா எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று ஏதோ ஒரு பக்கமாகவே பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள்.

ஒரு வீட்டில் மகளாக இருக்கிற நீங்க மறு வீட்டுக்கு போகும் போது மருமகள் என்று, மாமியார் உட்பட ஊர் உலகமே சொல்லுது. அதேபோல நீங்க திருமணமாகி போகிற வீட்டுல, உங்க வீட்டுல அம்மான்னு கூப்பிட்ட மாதிரி ‘மருஅம்மாஎன்றுதானே கூப்பிட வேண்டும்?

ஆனால், நீங்க ஏன்மாமியார் என்று கூப்பிட்டு, நான் எதைச் செய்தாலும், அதைக் கேட்க மாமிநீயார் என அவங்க கூட மல்லுக்கு நிக்குறீங்க; மத்தவங்க நிம்மதிய கெடுக்குறீங்க?”

ஒரு விசயம் தெரியமா உங்களுக்கு!

பிறப்பால் ஆண்களாக பிறக்கிற வெகுசிலர் தனது வாலிப வயதை நெருங்கும் போது குரோமோசோம் குறைபாட்டால், மனதளவில் பெண்களுக்கு உரிய மனோபாவம் வளர்ந்து, பெண்களைப் போலவே நடை, உடை, பாவனை என செயல்கள் மாறுபடும்.

அப்போது, அவ(னை, ளை) பெற்றெடுத்த அம்மாவே தாய்ப்பாசத்தை மறந்து வெறுத்து ஒதுக்குகின்ற நிலையில் அவ(னு, ளு)க்குத் தேவையான அன்பையும், ஆதரவையும் தந்து காப்பது, தாயம்மாவே!’’.

மரபணு குறைபாட்டால் திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மாறிய பாலினத்தவர்களின் மூத்த மூதாதையர்கள் தான், இந்த தாயம்மாக்கள்!!

இப்படி மாறிய பாலினத்தவர்களான திருநங்கைகள் தம்மைப் போலவே மாறிய மூதாதையர்களை தாய்க்கு நிகரான அம்மாக்களாக ஏற்றுக் கொள்ளும் போது, தனது மகன்களுக்கு உங்களை திருமணம் செய்து வைத்து, ‘மருமகளாக ஏற்றுக் கொள்ளும் மாமியாரை, மாமியார் என அழைக்காமல்மருஅம்மா என ஏற்றுக் கொண்டு அழைக்கக் கூடாது?”

இது போன்ற உங்களின் நல்ல சீர்த்திருத்த வார்த்தைகள்தாம், நீங்கள்மருமகளாக சென்றுள்ள வீட்டில், வரதட்சினையில் ஆரம்பித்து ஸ்டவ் வெடிப்பதை கூட நிப்பாட்டும் வல்லமை கொண்டது என்பதோடு, காலங்காலமாக இருந்து வரும் இந்திய கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றும்.

ஆம்! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை பெண்கள் உணர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள உயிர்களை வாழ வைக்கும் மண் போலவே, ஒவ்வொருமருமகளும் உங்கள் சுற்றமும் செழித்து வளர அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், மருமகள் வந்தால் நம் நிலைமை தலைகீழாய் மாறி விடும் என நினைத்து, எந்த தாயும் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதில்லை. மாறாக, இதனை உணர்ந்து மகனே திருமணத்தை மறுத்தாலும் வற்புறுத்தி செய்து வைக்காமல் விடுவதில்லை.

அம்மாக்களின் இச்செயல்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் மாக்களின் செயல் அன்று.

மாறாக, ‘நம் சுற்றம் உங்களால் வளரும் என்ற நம்பிக்கையே என்கிற எதார்த்த நிலையில், மாமியார் கொடுமைன்னு எல்லோரும் ஒரு தரப்பாகவே சொல்வதுமருமகள்கள், மாமிநீயார் என தனக்குத்தானே மனதால் எண்ணியும், தனது எண்ணத்தை வெளிப்படுத்தி தம்மனதையும் பிறர் மனதையும் சொற்கொடுமை செய்தால் எழும் எண்ண விளைவுகளே அன்றி, வேறில்லை.

இது இப்போது உங்களுக்கு புரியாவிட்டால், நீங்கள் மாமியாராகும் போது நிச்சயம் புரிந்தே தீரும்!

Posted onAugust 18, 2013CategoriesUncategorizedதலையங்கம்Tagsதாயம்மா,திருநங்கைகள்மருமகள்மாமியார்வரதட்சினைLeave a comment





ஆங்கிலேயனுக்கு பிறந்த நீதிபதிகள்!?

மனுநீதிச் சோழன் சிலை

ஆங்கிலேயன் நம்மை விட்டுச் சென்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், ஆங்கிலேயனின் பழக்க வழக்கங்களை இந்தியர்களான நம்மை விட்டு, அதிலும் குறிப்பாக தமிழர்களை விட்டுப் போவதாய் இல்லை. இல்லையில்லை, தமிழர்கள், புலி வாலை பிடித்த கதையாக, உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு விடுவதாய் இல்லை.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா! என்கிற தன்மானச் சொல்லாடல், தமிழன் என்று சொல்லாதேடா; தலை நிமிர்ந்து நிக்காதேடா! என்ற தன்னலமிக்க சொல்லாடலாக மாறி விட்டது. இப்படி சொல்பவன் ஆங்கிலேயனோ, அடுத்த மொழிக்காரர்களோ அல்ல. மாறாக, தமிழர்களே! நீதி வழங்கும் தமிழனே என்பதுதான் தமிழர்களின் தலையெழுத்து!!

மதராஸ் என்பது சென்னை என்று பெயர் மாற்றம் பெற்ற மாநகரமாகி விட்டது. ஆனால், மதராஸ் உயர்நீதிமன்றம் என்பது மட்டும், இன்னும் சென்னை உயர்நீதிமன்றமாக மாறவில்லை.

இம்மன்ற வளாகத்தில், நீதிக்கு இலக்கணமாகவும், நீதியை லட்சியமாகவும் கொண்ட மனுநீதிச் சோழனின் உருவச்சிலையை வைத்துள்ளார்கள். மனுநீதிச் சோழனது வரலாற்றில், கன்றை இழந்த பசு நீதி கேட்க, அதற்கு நீதி வழங்கப்பட்டது என்பது வரலாறு என்பது தமிழர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழி ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிந்ததே.

மனுநீதிச் சோழனது சிலையை உயர்நீதிமன்றத்தில் நிறுவியதன் நோக்கம், இதேபோல இவ்வுயர்நீதிமன்றமம் நீதிவழங்கும் என்பதை சொல்லாமல் சொல்லுவதற்குதான் என நீங்கள் நினைத்தால், அது மாபெறும் மடத்தனம். மாறாக, தமிழனின் பாரம்பரிய மிக்க நீதி வரலாற்றை எடுத்துரைத்து பெருமை பேசிக் கொள்ளத்தான் என நீங்கள் நினைத்தால், இதுவே புத்திசாலித்தனம் என்று நான் சொல்லவில்லை. நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் சொல்கிறார்கள் 

ஆங்கிலேயன் உட்பட அனைத்து மொழிக்காரர்களும் தமிழுக்கு அடிமையாகி, பெருமைமிக்க தமிழ்க் காவியங்கள், செய்யுள்கள், திருக்குறள்கள் என அனைத்தையும் தத்தமது மொழிகளில் மொழி பெயர்பதற்காகவே தமிழைக்கற்று, மொழிப்பெயர்த்த காலங்கள் மாறி, இப்போது அவர்களது அற்பமான, அபத்தமான, ஆபத்தான, ஆபாசமான விடயங்களை எல்லாம் பெருமையோடு தமிழில் மொழிப் பெயர்க்கத் தொடங்கி விட்டான், தன்னலத் தமிழன். விளைவு?  

மதம் பிடித்த மதத்தில், சதி செய்யும் சாதியில், ‘‘உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருப்பது போல, மொழியிலும் வந்து விட்டது. தமிழைப் படித்தவன், படிப்பவன் எல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்கிற தொனி பற்பல தரப்பிராலும் பரவலாக காணப்பட்டு, தற்போது நீதி வழங்கும் நீதிபதிகளிடம் கூட, எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது’’.

ஆம்! பசு தன் கண்ணீரால் பேசியதையே மனுவாக ஏற்று, தன் மகனை, தானே தேர்காலில் இட்டு, மாட்டுக்கும் & மனிதனுக்கும் சமநீதிதான் என, நீதியை நிலைநாட்டிய மனுநீதிச் சோழன் சிலை அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில், நேற்றைய வழக்கு விசாரணையின் போது, சிவகுமார் என்கிற அடிப்படை சட்ட அறிவு அறவேயில்லாத, கூலிக்கு மாரடிக்கும் அரைவேக்காட்டுத் தமிழ் நிதிபதி, நான் ஒருபோதும் தமிழில் வழக்கை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்றும், இதற்கு காரணமாக இந்திய அரசமைப்பில் இதற்கு வழியில்லை என்றும், ஆதலால், இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு எந்த நீதிபதியிடமாவது விசாரணை செய்ய கொடுங்கள் என தலைமை நீதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், நீதி வழங்க மனுவே தேவையில்லை; மாட்டின் கண்ணீரே போதுமானது என்று, தமிழர்களின் தலையாய நீதி முறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய தமிழனுக்கும், தமிழர்களுக்கும், தாய்மொழி தமிழுக்கும், தன்னலத்திற்காகவே தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார், அறிவு வறுமை மிக்க நிதிபதி சிவக்குமார்.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, ‘‘இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் தங்களது தாய் மொழி எதுவோ, அம்மொழியிலேயே மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் அல்லது அரசின் அதிகாரம் பெற்றவர்களிடம் மனு கொடுக்க உரிமையுண்டு’’.

எனது இக்கோட்பாட்டுக் கூற்றில், உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், மத்திய சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள இந்திய அரசமைப்பின் ஆங்கில ஆக்கத்தினை படித்து அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.

இக்கோட்பாட்டின் கீழ் கொடுக்கப்படும் மனு என்ன மொழியில் கொடுக்கப்படுகிறதோ, அம்மொழியிலேயே பதிலும் தரப்பட வேண்டும் என்பதும் உள் அர்த்தமாகும் என்பதோடு, இக்கோட்பாடு சிறப்பான நெறிமுறைகளின் கீழ் வருவதால், உச்சநீதிமன்றத்தில் கூட, தத்தமது தாய்மொழிலேயே மனு கொடுக்க முடியும்.

ஆனால், இவைகள் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும், இடைத்தரகர்களும் ஆன வக்கீல்களுக்கும், வக்கீல்களாய் இருந்து நீதிபதிகளான நிதிபதிகளுக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்?

குடியரசு தலைவருக்கு கூட தெரியாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், இதுதான் உண்மை. ஆதலால்தான், நான் குடியரசுத் தலைவருக்கு தமிழில் அனுப்பிய கடிதத்திற்கு, ஆங்கிலத்தில் பதில் கொடுக்க, அதனை சட்டப்படி ஏற்க முடியாது என அறிவித்ததும் தமிழில் தந்தார்கள். இவ்விரு சங்கதிகளையும் 2004 ஆண்டே நடைமுறைப்படுத்தி உள்ளேன்.

அப்படியானால், அறிவு வறுமை நிதிபதி சிவக்குமாருக்கு, 
1. இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 என்ன சொல்கிறது என்பது தெரியாது என்கிறாரா? 
2. தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறாரா?
3.
இவர் இந்திய அரசு அதிகாரத்தின் கீழ் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்கிறாரா? 
என்பதுதே, நான் விடுக்கும் கேள்வி. பதில் சொல்வாரா அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிமன்ற அவமதிப்பு என்று நடவடிக்கை எடுப்பாராஎது வந்தாலும் வரவேற்க நான் தயார்!

இந்திய அரசமைப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆங்கிலத்தைப் போன்றே, தமிழும் சர்ச்சையில்லாத அங்கீகரிக்கப்பட்ட வழக்கு மொழியாக என்ன செய்ய வேண்டும், தமிழை கொண்டு வர வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் தயங்குகிறார்கள், இதில் அவர்களுக்கு உள்ள லாபமென்ன என்பது பற்றிய பற்பல திடுக்கிடும் தகவல்களை
விரைவில் கட்டுரையாக வடிக்க முயல்கின்றேன்.

மகாத்மா காந்தி வக்கீல் தொழிலையும், நீதிபதி தொழிலையும் விபச்சாரத்தொழில் என்றார். தந்தைப் பெரியார் ஈனப்பிறவிகள் என்றார்.  

இவ்விபச்சார தொழிலுக்கு தக்கதொரு விபச்சாரியாக ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுள்ளனர் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆன ஆனால், ஆங்கிலேயனுக்கு பிறந்து, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்தது போன்ற கற்பனையில் வாழும், நமது ஈனப்பிறவி வக்கீல்களும், நீதிபதிகளும்!

வக்கீல்களையும், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஒழிக்கப்படும் வரை, நீதிக்கு அநீதியேசமாதியேசாபக்கேடே











நீதித்துறையில் கருப்பு ஆடுகள்!

பொதுவாக ஒரு துறையில் நடக்கும் தவறுகள் ரகசியமாக வெளியில் தெரிகிறது என்றால், அத்துறையில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கிறது என்பதை நிஜத்தில் கேள்விப்படவில்லை என்றாலும் கூட, சினிமா வசனத்தில் கேட்டிருப்பீர்கள்.

கூடவே, அந்த கருப்பு ஆடால், சமுதாயத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களின் விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அச்சினிமாவிலேயே பார்த்திருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாகவே பார்த்திருப்பீர்கள் அல்லது அனுபவித்து இருப்பீர்கள்.

அரசு துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டுமானால் நீதித்துறையைதாம் நாம் நாட வேண்டும்.

அப்படி நாடும் நீதித்துறையில் ஒரு கருப்பு ஆடு இருந்தால் கூட, அரசுத்துறையின் அவலம் என்னவோ அதுதானே நீதித்துறைக்கும்? அப்படியானால், நீதியின் நிலைமை என்னவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா?

ஒரு கருப்பு ஆட்டின் விளைவையே கற்பனை செய்து பார்க்க முடியாத போது, நீதித்துறையில் எல்லாமே கருப்பு ஆடுகளாக இருந்தால் நீதியின் நிலைமை என்னாகும்? நீதிக்கே அநீதிதானே!

நீதிக்கே அநீதி என்றால், நமக்கெல்லாம் என்ன மீதி இருக்கும் தெரியுமா?

கேட்காமல் கொடுப்பது நீதி.


கேட்டப் பின் கொடுப்பது அநீதி!


கேட்டப் பின்னும் கொடுக்க மறுப்பது நீதிக்குச் சமாதி!!

ஆம்! சமாதிதான் மீதி என்பது, நம்மிடம் இருந்து விடை பெற்ற 2012 இறுதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரை துறந்த மருத்துவ துணை மாணவியின் வரலாறாக இருக்கப்போகிறது.

நீதித்துறையின் தலையாய கடமை குற்றத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, கேட்காமலேயே நீதியை வழங்குவதுதான். ஆனால், ஆங்கிலேயர்களது நீதியே பரவாயில்லை என்கிற அளவிற்கு கேட்டப் பின்னும் கொடுக்காமல் பலருக்கும் சமாதி கட்டுவதுதான் இன்றைய இந்திய (நீ)நிதிபதிகளின் லட்சியமாக இருக்கிறது.

குற்றங்கள் குறைய வேண்டுமெனில் வலுவான சட்டங்கள் தேவை என்கிற கருத்து பரவலாக நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நீதியை நிலைநாட்ட இருக்கின்ற சட்டங்களே போதும்! ஏனெனில், நாட்டில் எவ்வளவு சட்டங்கள் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது என்று நான் சொன்னால், உங்களுக்கு நம்ப சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

தமிழ்நாடு சட்டத்துறை கடிதம்

இதனை ஆவணத்தின் வழி நிறுபிக்கவே, எவ்வளவு சட்டங்கள் இருக்கிறது என்பது குறித்த ஆவணங்களை பராமரிக்கவில்லை என்கிற தமிழக சட்டத்துறையின் சான்று நகலை சமர்ப்பிக்கிறேன். இந்நிலையில், இதற்கு மேலும் முன்னுக்கு பின் முரணான சட்டங்கள் எதற்கு?

அமலில் இருக்கிற சட்டங்களை, அதிலும் குறிப்பாக பஞ்ச பூதங்கள், ஐம்புலன்கள் போல, இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள் மற்றும் உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்கிற இந்த ஐந்து அடிப்படையான சட்டங்களை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தினாலே போதும்! சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்; குற்றங்கள் குறைந்து விடும்!!

ஆனால், இவ்வைந்து சட்டங்களையும், ‘‘நியாயம்தான் சட்டம்’’ என்கிற கொள்கை நீதி கோட்பாட்டிற்கு இணங்க நடைமுறைப்படுத்த சட்டத் தெளிவுள்ள, தைரியமான, எதற்கும் மயங்காத கொள்கையுள்ள நீதிபதிகள் இந்தியாவில் ஒருவர் கூட இல்லை என்பதுதான் எனது ஆணித்தரமான கருத்து.

இவைகளை இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட அத்தனை தீர்ப்புகள் மூலமாகவே என்னால் நிறுபிக்க முடியும். இப்படிச் சொல்வதால், எனக்கு எல்லாச் சட்டமும் தெரியும் என்பது அல்ல உட்பொருள். மாறாக, மற்ற சட்டங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்ற இவ்வைந்து சட்டங்களும், எனது கருத்தை நிறுபிக்க தேவையான அளவிற்கு தெரியும். அவ்வளவே!

நீதிபதிகளின் இவ்வறியாமைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதே ஆகும்!

ஏனெனில், நியாயத்தை சொல்ல சமயோசித்த புத்தியும், சாதுரியமாக கேட்டு அறியும் தன்மையும், நடுநிலை நோக்கும்தாம் தேவையே ஒழிய, ஒருபோதும் நிச்சயமாக சட்ட அறிவு தேவையில்லை. சட்டம் என்பது இதன் விளைவு இதுதான் என்பதை விளக்கும் வாய்ப்பாடே என்பதால் அந்த அளவிற்கு சட்டத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதும்.

ஆனால், இதுவும் தெரியவில்லை என்பதோடு, மேற்சொன்ன எந்தஒரு தகுதியும் நீதிபதிகளுக்கு இருப்பதில்லை. இது ஏன் தெரியுமா?வக்கீல்களில் இருந்து நீதிபதிகள்  தேர்ந்தெடுக்கப்படுவதுதான்.

அப்படியானால் வக்கீல் என்பவர்கள் யார் என்றால், வக்கீலாக கடமையாற்றிய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி வக்கீல் தொழிலை விபச்சாரத் தொழில் என்றும் வக்கீல் தொழில் செய்பவர்களை ஈனப் பிறவிகள் என்று தந்தைப் பெரியாரும் சொல்லியுள்ளதை முகப்பு பக்கத்தில் படித்து இருப்பீர்கள். ஒருவேளை படிக்காமல் இருந்தால்,படித்தப்பின் இதனை தொடருங்கள்.

ஆமாம்! எல்லாம் புரிந்து விட்டது இதற்கு மேல் நீங்கள் என்ன சொல்ல வேண்டியிருக்கு என்று கேட்கலாம்.

ஆனாலும், அவர்கள் தெளிவாக சொல்லாத ஓரிரு உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. தற்போது வக்கீல்களுக்கு படிப்பவர்களை மூன்று விதங்களில் வகைப்படுத்தலாம்.

முதலாம் வகையில், வக்கீல்களின் கல்வித் தகுதியை ஆராய்ந்தால், நன்றாக படிப்பவர்கள் எல்லாம் தகவல் தொழில் நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு சென்று விடுகின்றனர். அப்படியில்லாதவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கௌரவத் தொழிலே வக்கீல் தொழில்.

இரண்டாம் வகையில், வக்கீல்களின் ஒழுக்க தகுதியை ஆராய்ந்தால், இன்றைக்கு வக்கீல்களுக்கு படிப்பவர்களில் அறுபது சதவிகிதம் பேர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களே! அவர்களுக்கு படிக்கும் திறன் இல்லாத போது, தனது குடும்பத்தில் ஒருவரை படிக்க வைக்கிறார்கள்.

மூன்றாம் வகையில், வக்கீல்களின் சான்றிதழ் தகுதியை ஆராய்ந்தால், இன்றைக்கு வக்கீல்களுக்கு படிப்பவர்களில் எழுபது சதவிகிதம் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் செயல்படும் சட்டக்கல்லூரிகளில் இருந்து, பகுதி நேரமாக படித்ததாக காசு கொடுத்து வங்குவதுதான்.

இப்படிப்பட்டவர்கள்தான், பின்னர் நீதிபதிகளாகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?

சுருக்கமாக சொல்லப்போனால், வக்கீல்கள் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

இதைத்தவிர வேறு எந்த தகுதியும் வக்கீல்களுக்கு கிடையாது என்கிற எதார்த்த நிலையில் இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள் கருப்பு ஆடுகளாக இல்லாமல் வேறு எப்படி இருப்பார்கள்? ஆதலால்தான், இவர்களின் குற்றங்களை, அசிங்கங்களை மறைப்பதற்கு பொருத்தமாக கருப்பு நிற அங்கிகளை போர்த்திக் கொள்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நீதித்துறையில் எல்லாமே கருப்பு ஆடுகள்தானே?