fbpx

சதுரங்கம் (கவிதைகள்) – ப.மதியழகன்

நூல் பெயர்: சதுரங்கம்(கவிதைகள்)
ஆசிரியர்: ப.மதியழகன்
மின்னஞ்சல்: [email protected]

பதிப்பு: மார்ச் 2018
வெளியீடு: freetamilebooks.com
மின்னூலாக்கம்: ப.மதியழகன்
அட்டைப்படம்: ப.மதியழகன்
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work

 

 

இதைத்தவிர வேறெதுவுமில்லை

கவிதை மொழியை இன்னும் கூர்மையாக்கி இருக்கிறேன் இந்தக் கவிதை தொகுப்பில். படைப்பாளனுக்கு ஆழ்ந்த வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை முதல் தொகுப்புக்கு பின்பு தான் உணர்ந்தேன். கவிதைக் கடலைக் கண்டு பிரம்மித்துப்போய் கரையிலேயே நின்ற நான் துணிந்து கடலில் இறங்கினேன். இப்போது சமுத்திரத்தின் அலைகளினூடே மிதக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

கவிதையை எழுதிய கவிஞனுக்கு புரிபடாத அர்த்தங்கள் வாசகனுக்கு புரிபடக்கூடும். கவிதைக்கும் உளவியலுக்கும் சம்பந்தம் உண்டு. வாசகனின் உள்ளிருக்கும் மொட்டை மலரச் செய்ய கவிதையால் மட்டுமே முடியும். பால்யத்தில் மழையின் ருசியை அறியாதவர்கள் எவர் இருக்கக்கூடும். பதின் வயதுகளில் இயற்கையின் பேரழகுக்கு மனதை பறிகொடுக்காதவர்கள் எவர் இருக்கக்கூடும். கோடை மழை வரும்போது இடிமின்னல் இருக்கக்கூடும். அது இந்தத் தொகுப்பிலுள்ள கவிதை மழைக்கும் பொருந்தும்.

சிப்பி மழைத்துளிக்காக காத்திருப்பதைப் போல தவமிருந்து கவிதை செய்திருக்கிறேன். முத்தைத் தேடித்தான் தமிழக்கடலில் மூழ்குகிறேன் பல சமயம் கிளிஞ்சல்களே கைகளுக்கு அகப்படுகிறது. இந்தக் கவிதை தொகுப்பில் முத்துக்களை கண்டெடுப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்காது.

கோயிலுக்குள் நுழையும் முன்பு காலணிகளைக் கழட்டி வைத்து விடுவீர்கள் அல்லவா. இப்போது என் மனக்கோயிலுக்கு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் கண்ணுக்கு கற்சிலை தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் நரகமாகும். உங்கள் கண்ணுக்கு தெய்வம் தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் சொர்க்கமாகும்.

பால்யம் கொண்டாடப்பட வேண்டிய பருவம் என பதின் வயதுகளில் தான் அறிந்து கொள்கிறோம். உங்கள் கைகளில் தவழும் இந்த்க் கவிதை தொகுப்பும் பால்யம் போன்றதொரு கண்ணாடிப் பாத்திரமே. கடைகளில் பார்த்து ரசித்ததை பத்திரப்படுத்த வீட்டுக்கும் வாங்கி வரலாம். மற்றவரும் மகிழட்டுமே என எண்ணி பரிசுப் பொருளாகவும் கொடுத்து வரலாம். இதோ நான் பிடித்துக் கொண்டிருந்த ராட்சசக் குடையை மடக்கிக் கொள்கிறேன். நனையுங்கள், கவிதை மழையில் நனைவதற்கு கச்குமா என்ன?

ப்ரியமுடன்
ப.மதியழகன்

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) epub”

sathurangam-poems-pamathiyalagan.epub – Downloaded 1622 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) mobi”

sathurangam-poems-pamathiyalagan.mobi – Downloaded 922 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) A4 PDF”

sathurangam-poems.pdf – Downloaded 1832 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) 6 inch PDF”

sathurangam6inchpdf.pdf – Downloaded 1317 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/sathurangam-poems

புத்தக எண் – 362

மார்ச் 11 2018

 

 

 

 

 

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.