fbpx

குறள் விடு தூது

epub

உலகப் பொதுமறை என எல்லாராலும் போற்றப்படுவது திருக்குறள் நூல் . இதை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . இவரது காலம் கி . மு . முதலாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும் . முற்காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்கள் பத்துப்பேர் , இந்நூலுக்கு நன்றாகவே உரை எழுதியுள்ளார்கள் . இருந்தும் , இக்காலத்தில் பல தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் . அவர்களில் சிலர் , முந்தைய உரையை மறுத்தும் திரித்தும் எழுதியுள்ளார்கள் .

 

ஆனால் நான் , ஒன்றேமுக்கால் அடிகளில் உள்ள குறட்பாக்களுக்கு , இரண்டியில் வள்ளுவரின் கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமல் , சந்தப் பாடல்களாக எழுதியுள்ளேன் . இதனுடைய சந்தம் நாட்டுப் புறத்தாலாட்டுப் பாடல் இசையாகும் .

 

எடுத்துக்காட்டு

 

கண்ணேஎன் கண்மணியே கனகமணி பொற்சரமே
பொன்னே நவமணியே பொற்பாவாய் கண்ணுறங்கு

 

இவ்வாறு குறள்கூறும் கருத்துப்பழங்களை அள்ளிக்கொள்ளும் வகையில் மிக எளிமையாக எல்லாரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளேன் .

 

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் உள்ள குறட்பாக்களின் கருத்துப் பழங்களைத் திரட்டி , சாறாகப் பிழிந்து சர்க்கரையும் கூட்டித் தித்திக்கும் தமிழ் அமுதமாகப் படைத்துள்ளேன் .

 

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு“

 

இது வள்ளுவர் மொழியாகும் . தலையாய கற்புக் கரசியானவள் , ‘ மழையே பெய்’ என்று சொன்னால் அது பெய்யும் என்பதின் பொருள் , என்னவென்றால் மழைபெய்யும் என்பதல்ல ; கற்புடைமைக்கு மாபெரும் சக்தி உண்டு என வலியுறுத்தப் பட்டுள்ளது . கற்புடைமை உயரிய பண்பாகும் என்பதை நாம்புரிந்து கொள்ள வேண்டும் . ‘ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் கொடு’ இதில் பொறுமை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது . ‘ அடடே ! எப்பேர்ப்பட்ட மனிதர் – இறந்து போனாரே என்ற துக்கத்தில் ஊரே அழுதது ; கல்லும் உருகியது , புல்லும் கருகியது .’ இதில் இறந்த மனிதர் ரொம்ப நல்லவர் என்பது விளக்கப்பட்டது . கல் உருகும் என்பது பொருள் அல்ல . கல் உருகமாட்டாது .

 

காந்தியடிகள் உண்மையே கடவுள் என்றும் , வள்ளலார் அன்பே கடவுள் என்றும் , அண்ணாதுரை அறிவே கடவுள் என்றும் கூறியுள்ளார்கள் . கடவுளுக்குரிய எட்டுப் பண்புகளில் அவரவர் கண்ட ஒரு பண்பை மட்டும் தெரிவித்திருக்கிறார்கள் . எட்டுப் பண்புகளாவன ; அன்புடைமை , அறிவுடைமை , வாய்மை ; நடுவு நிலைமை ; ஆற்றலுடைமை , அருளுடைமை , உவமையின்மை , பற்றின்மை இப்பண்புகள் பற்றியே இறைவனை எண்குணத்தான் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் .

 

திருக்குறள் முதல் அதிகாரத்தில் இறைவாழ்த்துக் கூறவந்தவர் இறைவன் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் . உரை எழுதியவர்கள்தான் முதல் அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது , திருவள்ளுவர் சமண முனிவர் என்பதும் , வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவர் என்பதும் விளங்குகிறது . எப்படியிருந்தாலும் திருக்குறளை நன்கு கற்று அதன்வழி எல்லாரும் நடக்கவேண்டும் ; அதுவே மனித வாழ்வுக்குச் சிறப்பாகும் . அதற்கு வழிகாட்டியாக இந்த ‘குறள் விடு தூது’ இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

 

அன்பன் . . வேலு என்ற வேற்கவிராயர்

 

குறள் விடு தூது

ஆசிரியர் : . வேலு

வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

மின்னூலாக்கம் : லெனின் குருசாமி [email protected]

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “குறள் விடு தூது epub”

kural-vidu-thoodu.epub – Downloaded 4220 times – 929.85 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “குறள் விடு தூது mobi”

kural-vidu-thoodu.mobi – Downloaded 1904 times – 347.11 KB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “குறள் விடு தூது A4 PDF”

kural-vidu-thoodu-A4.pdf – Downloaded 17343 times – 1.24 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “குறள் விடு தூது 6 Inch PDF”

kural-vidu-thoodu-6-Inch.pdf – Downloaded 3228 times – 1.41 MB

 

புத்தக எண் – 36

சென்னை

 

பிப்ரவரி 19  2014

 

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.